Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர்போர்ட் முதல் பையோமைனிங் வரை.. கோவைக்கு அள்ளித் தந்த முதல்வர்.. என்னென்ன திட்டங்கள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த திட்டங்கள் பல இதன் மூலம் தொடங்கப்பட்டுள்ளதாகல் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chief Minister brought to Coimbatore district; Do you know what the plans are?

முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன? அதன் மூலம் பயனடைபவர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.

இன்று காலை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடி மதிப்பளவில் 748 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.271.25 கோடி மதிப்பளவில் 228 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 1,07,062 பயனாளிகளுக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார். கோவை மாவட்ட வரலாற்றிலேயே இத்தனை பேருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதன் முறைய என சொல்லப்படுகிறது.

தற்போது இம்மாவட்டத்தில் ரூ.93.66 கோடி மதிப்பீட்டில் 98.42 கி.மீ நீளத்திற்கு 335 சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.60.01 கோடி மதிப்பீட்டில் 62 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பையோமைனிங் திட்டப் பணிகள், ரூ.49 கோடியில் சங்கனூர் பள்ளம் 11.49 கிமீ நீளத்திற்கு மேம்பாட்டுப் பணிகள், ரூ.16.41 கோடி மதிப்பீட்டில் 63 எண்ணிக்கையிலான நகர் நல மையங்கள் மற்றும் 3 எண்ணிக்கையிலான மருத்துவ ஆய்வுக் கூடங்கள் கட்டும் பணிகள் என நடைபெற்று வருகின்றன.

மட்டுமல்லாது, ரூ.20 கோடியில் கோவை நகராட்சி பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்கும் பணி, ரூ.16 கோடி மதிப்பில் 63 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 3 மருத்து ஆய்வுக்கூடங்கள் கட்டும் பணிகள், ரூ.11 கோடியில் கோவை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகிய திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய திட்டமாக பார்க்கப்படுவது கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம்தான்.

உலகளவிலான தொழில் நகரமாக கோவை வளர்ச்சி பெறும் வகையில் கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு ரூ.1,810 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகள் ஒருபுறம் எனில், நிறைவுபெற்ற பணிகளும் அதேபோல நீண்டுள்ளது. அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா ஹால் ரூ.91 லட்சம் செலவில் நவீன முறையில் மாநகராட்சி மன்றத்திற்கான கலந்தாய்வுக் கூட்ட அறை சீரமைக்கும் பணிகள் நிறைவுற்றுள்ளன.

மேலும், ரூ.50 லட்சம் செலவில், கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம் கட்டும் பணிகள், மாவட்டத்தில் 275.57 கிமீ தொலைவு நீளத்திற்கு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் போன்றவை தற்போது முடிவடைந்துள்ளதாக அரசு சார்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டங்களும், ஏற்கெனவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களும்தான் கோவையை நவீனமாக மாற்ற இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+