கோயம்புத்தூரில் வேலை செய்த வீட்டில் பீரோ நிறைய தங்கம்.. கார்பெண்டர் கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்
கோவை: கோயம்புத்தூரில் மதுக்கரை ரோட்டில் உள்ள பழனியப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருகிறார். இவரது வீட்டில் கதவு, ஜன்னல், கட்டில், பீரோ மற்றும் மரத்தால் ஆன உள்அலங்கார வேலை செய்த மாதவன் என்ற தச்சு தொழில் வேலை செய்தார். இந்நிலையில் வேலை செய்த வீட்டிலேயே சுமார் 16 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடியாக மாதவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைக்கு தங்கம் விலை ஒரு சவரன் 81 ஆயிரம் என்கிற அளவில் விற்பனையாகிறது. இதனால் பலர் தங்கத்தை பாதுகாப்பாக வைக்க பல வழிகளை தேடுகிறார்கள். அதேபோல் திருடர்களும் அதனை திருட பல வழிகளை தேடுகிறார்கள். அதேபோல் சிலர் வீட்டு வேலைக்காக போயிருப்பார்கள். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் வீட்டில் நிறைய தங்கம் இருப்பதை பார்த்தும் சிலர் சலனப்பட்டு திருடிவிடுவார்கள். அப்படித்தான் ஒருவர் திருடியதில் சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

மதுக்கரை வீடு
கோவை மதுக்கரை ரோட்டில் உள்ள பழனியப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் டேனியல் என்பவர் பிசினஸ் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்து கட்ட முடிவு செய்திருக்கிறார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேலையை தொடங்கியுள்ளார். தனது வீட்டில் கதவு, ஜன்னல், கட்டில், பீரோ மற்றும் மரத்தால் ஆன உள் அலங்கார வேலையை செய்ய விரும்பியுள்ளார். அந்த பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது. கார்பெண்டர் வேலைக்கு சுந்தராபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தச்சு தொழிலாளியான மாதவன் (36) என்பவரை டேனியேல் நியமித்துள்ளார். அதன்படி அவர் அந்த வீட்டில் வேலை செய்து வந்துள்ளாராம்.
பீரோவில் தங்க நகைகள் மாயம்
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி டேனியல் தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்திருக்கிறது. உடனே அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார். அங்கு மாதவன் மட்டும் வந்து சென்றது தெரியவந்தது.எனவே அவர்தான் அந்த நகைகளை எடுத்து சென்று இருக்கலாம் என்று டேனியலுக்கு சந்தேகமும் எழுந்தது. உடனே இவர் இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
20 பவுன் தங்கம் திருடியது எப்படி
அதை மாதவன் பார்த்துக் கொண்டே இருந்து உள்ளாராம். அந்த பீரோவில் தங்க நகைகள் நியை இருப்பதை தெரிந்து கொண்ட அவர், பீரோ சாவியை எடுத்து அதில் இருந்த 20 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடி உள்ளார். பிறகு பீரோவை பூட்டிய அவர் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு சென்றது தெரியவந்திருக்கிறது. அந்த நகையின் மதிப்பு ரூ.16 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்க்கையில் மாதவனை தவிர வெளியாட்கள் யாரும் உள்ளவரவில்லை என்பது உறுதியானது.அதனால் சந்தேகத்தில் விசாரித்த போது மாட்டிக் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
-
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications