பரபரக்கும் கோவை.. 17 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை.. பாதுகாப்பு பணியில் 3800 போலீசார் குவிப்பு
கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்த கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுகள் 17 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தல் மூலம் மாநகராட்சியில் 1,369 வார்டுகள், நகராட்சியில் 3,824 வார்டுகள், பேரூராட்சியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வாகி இருந்தனர்.

61 சதவீத ஓட்டுப்பதிவு
இந்நிலையில் பிப்ரவரி 19ல் விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஓட்டளித்தனர். 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் 279 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.

கோவையில் 17 மையங்களில் எண்ணிக்கை
கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு பிப்ரவரி 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் 17 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது. இதுதவிர பிற நகராட்சி, பேரூராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் ஓட்டு எண்ணும் மையங்ளில் வேட்பாளர்கள், முகவர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு
பாதுகாப்பு கருதி கோவை மாநகரில் 2400 போலீசார், புறநகர் பகுதியில் 1460 போலீசார் என மொத்தம் 3860 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன
முன்னதாக நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது கோவை மாநகரில் திமுகவினர் அராஜக செயலில் ஈடுபடுவதாக அதிமுக, பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் கரூர் பகுதியை சேர்ந்தவர்கள் கோவையில் முகாமிட்டுள்ளதால் துணை ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நேர்மையாக தேர்தல் நடத்த துணை ராணுவம் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதை மாநில அரசு புறக்கணித்த நிலையில் மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட அதிமுகவினர் கோவை கலெ க்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications