கோவை சாய்பாபா காலனியில் திவ்யா போட்ட ஆட்டம்.. மகன் மீது ஈவிரக்கம் இல்லையா? ஆண் நண்பருக்காக இப்படியா?
கோவை: கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த வழக்கில், அவனது பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் கோவை சாய்பாபா காலனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைபற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
கோவை சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா.. இவருக்கு 32 வயதாகிறது.. திருமணமானவர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டார்..

கோவை சாய்பாபா காலனி திவ்யா
அபிஷேக் என்ற 6 வயது மகன், ஒரு 3 வயது மகள் திவ்யா என்ற 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.. வாழ்வாதாரத்துக்காக அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலையும் பார்த்து வந்தார். கணவர் பிரிந்து விட்டாலும், 2 குழந்தைகளையும் மட்டும் அடிக்கடி பார்த்துவிட்டு செல்வாராம்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜதுரை (35) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ராஜதுரை அடிக்கடி திவ்யாவின் வீட்டுக்கு வந்து அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
கள்ளக்காதல் ஜோடி
ஆனால் இரண்டு குழந்தைகளும், தங்களது உறவுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக இந்த ஜோடி கருதியுள்ளது. அதனால் பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல் 2 குழந்தைகளையும் திவ்யாவும், ராஜதுரையும் தொடர்ந்து அடித்து, மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
இதில் 6 வயது சிறுவன் அபிஷேக், அளவுக்கு அதிகமான டார்ச்சருக்கு ஆளானான்.. ஒருமுறை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது, தன்னுடைய அப்பா வீட்டில் இருந்ததை பார்த்துள்ளான். உடனே தன் அப்பாவிடம், தனக்கும், தன் தங்கைக்கும் வீட்டில் நடக்கும் கொடுமைகளை ஒன்றுவிடாமல் சொல்லி அழுதுள்ளான்.. அம்மாவும், வீட்டுக்கு வரும் ஒரு மாமாவும் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதாக கூறி கதறி அழுதிருக்கிறான்.
கதறி அழுத பெற்ற மகன்
எப்படியாவது இங்கிருந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு அப்பாவிடம் கெஞ்சியுள்ளான் சிறுவன்.. அதற்கு அவனது அப்பா, இப்போது புதிதாக வீடு கட்டி வருகிறேன்.. வீட்டு வேலை முடிந்ததுமே உன்னையும், தங்கச்சியையும் கூட்டிட்டு போய்விடுகிறேன் என்று சமாதானம் செய்துவிட்டு சென்றுள்ளார்.
இதற்கு பிறகுதான் அந்த கொடுமையை கள்ளக்காதல் ஜோடி செய்துள்ளது.. .2020ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அபிஷேக்கை, ராஜதுரையும் திவ்யாவும் அழைத்து சென்றுள்ளனர்.. அங்கேயே வைத்து, தடிமனான குச்சியால் மிகக் கொடூரமாக அடித்து தாக்கியிருக்கிறார்கள்..
கோவை சாய்பாபா காலனி சம்பவம்
அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீங்க? என்று பதறிப்போய் கேட்டு கண்டித்திருக்கிறார்கள்.. அப்போதும் கள்ளக்காதல் ஜோடி விடாமல் சிறுவனை அடித்துள்ளது.. இந்த டார்ச்சரில் படுகாயமடைந்த சிறுவன் அபிஷேக் திடீரென மயங்கி விழுந்து விட்டான்.
பிறகு அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாய்பாபா காலனி காவல் துறையினர் உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, தாய் திவ்யா மற்றும் அவளது கள்ளக்காதலன் ராஜதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சரியான தீர்ப்பு தந்த நீதிபதி
இந்தக் கொலை வழக்கின் விசாரணை கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி சாட்சிகளுடன் , நிறைய பாயிண்ட்களை தன்னுடைய வாதமாக முன்வைத்தார். வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இந்த வழக்கில் இப்போது அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட தாய் திவ்யா மற்றும் அவளது கள்ளக்காதலன் ராஜதுரை ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இருவருக்குமான தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.
இந்த கொடூரக் கொலை வழக்கில் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். பெற்ற மகனையே உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி தாயே அடித்துக் கொன்ற சம்பவத்தில் தண்டனை உறுதியாகியிருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!
-
கிளாம்பாக்கம் 100 பஸ்கள்.. மலை கிராமங்களுக்கு பறக்கும் பேருந்துகள்! சென்னை டூ சேலம் தவெக அரசு ஸ்பீடு -
பிறப்புச் சான்றிதழ் அவசியம்! மாறுவேடத்தில் ஆதார் சென்டர் போன தேனி தாசில்தார்.. அங்கே தான் ட்விஸ்ட் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications