கோஷ்டி மோதலில் இந்து முன்னணி பிரமுகர் கார் மீது கல்வீச்சு- இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது
கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் வீடுகள், வாகனங்கள் மீது திடீர் திடீர் என பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் பெருமளவு சேதம் ஏற்படவில்லை.
5 நாட்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடங்களில் போலீசார் சிசிடிவி கேமராக்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகளின் போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருந்தபோதும் கடந்த காலங்களில் பாஜகவினர் இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு நாடகங்களை நடத்தியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து சந்தேகங்களும் எழுப்பினர். ஆனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டதால், திருமாவளவன் மற்றும் சீமானை பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் ஹரிஷ் கார் கல் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகளான தமிழ்ச்செல்வன், ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சிலையை யார் வைப்பது என்பது தொடர்பான மோதலில் இந்த கார் வீச்சு சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications