காவல் துறைக்கு பல சோலிகள் இருக்கு.. பேனரை அவிழ்ப்பது உங்கள் பணியில்லையே.. கமல் கடும் தாக்கு!
கோவை: காவல் துறைக்கு பல சோலிகள் இருக்கின்றன, பேனர்களை அவிழ்க்க வேண்டியது அவர்களது பணியில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் சில இடத்திற்கு அவர் பேச அனுமதியில்லை.
சில இடங்களில் அவரது கட்சிக் கொடிகள், போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுவதாகவும் கமல்ஹாசன் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அவர் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
|
சோலிகள்
அதில் காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே... என தெரிவித்துள்ளார்.

அனுமதிக்க முடியாது
இவரது பிரச்சாரம், பேச்சு ஆகியவற்றை ஆளும் கட்சி போலீஸை விட்டு ஒடுக்குவதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டுகிறார். அமைதியான முறையில் பிரச்சாரம் நடத்தவும் முதலில் அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் அனுமதிக்க முடியாது என்கிறார்கள் என்றும் கமல் தனது பிரச்சாரங்களில் விமர்சித்துள்ளார்.
|
போஸ்டர்
அது போல் அவர் இன்னொரு ட்வீட்டையும் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? என கமல்ஹாசன் கேட்டுள்ளார். அண்மைக்காலமாக செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும்கட்சியின் ஊழலை பட்டியலிட்டு வருகிறார் கமல்ஹாசன்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications