அரைவேக்காடு அண்ணாமலை..! நானும் இருக்கேனு காட்டிக் கொள்ள பேசுகிறார்..! விளாசிய செந்தில் பாலாஜி!
கோவை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமான கருத்துகளை தொடர்ந்து கூறிவருகிறார் எனவும், நாங்களும் இருக்கிறோம் என்ற இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவையில் 113.21 கோடி ரூபாய் மதிப்பிலான நகர் நல மைய கட்டிடங்கள் மற்றும் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதற்கான தொடக்கவிழா இன்று நடைபெற்றது.
இந்த பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை லாலி ரோடு சாலையில் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி," கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 1,131 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 800 கோடி ரூபாய்க்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

கோவை மாவட்டம்
இரண்டு மூன்று மாதங்களில் மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிந்து விடும். அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் விரிவுப்படுத்தி உள்ளார். மற்ற மாவட்டங்களின் மாநகராட்சியை விட அனைத்து திட்டங்களையும் பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் தி.மு.க ஆட்சியில் இருக்கும்.

பாஜக அண்ணாமலை
தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை இருப்பினும், தமிழ்நாட்டில் தொழில் துறையின் தலைநகராக கோவை இருக்கிறது. அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை தொடர்ந்து கூறிவருகிறார். நாங்களும் இருக்கிறோம் என்ற இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.
Recommended Video

அவதூறு பரப்புகிறார்
மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசிடம் கொண்டு வந்து சேர்க்கும் அரசிற்கு எடுத்துக்காட்டான பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் மீது அவதூறு பரப்புகிறார்" என பேசினார். தமிழக அமைச்சர்கள் இருவரின் ஊழல் பட்டியல் குறித்து வெளியிடப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அதற்கு திமுக அமைச்சர்கள் கடுமையாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications