கோவையில் தேசியக்கொடிகளை விரைந்து சென்று அகற்றிய போலீசார்.. விதி மீறலால் பரபரப்பு - என்ன நடந்தது?
கோவை : கோவையில் இந்து முன்னணி மற்றும் அதிமுக கொடி கம்பங்களில் கட்சிக் கொடிகளுக்கு கீழாக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் கட்சி கொடிகளுக்கு கீழ் கட்டப்பட்டிருந்த தேசியக்கொடிகளை அகற்றினர்.
75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்தவகையில், பல்வேறு இடங்களிலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். பல இடங்களில் தேசியக்கொடிக்கான விதிகளை மீறுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இல்லம் தோறும் தேசியக்கொடி
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசியக்கொடி' என்ற செயல்பாட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ஆம் தேதி வரை 3 நாட்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் மூவர்ணக் கொடியை பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அழைப்பு
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டப்படுவதையொட்டி, இந்திய மக்கள் அனைவரும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து வீடு, கடைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் காவல் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் பறக்கவிடப்படும் தேசியக் கொடியை, இரவில் இறக்கத் தேவையில்லை. மூன்று நாட்களும் பறந்தவாறே இருக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

வீடுகளில் மூவர்ணக் கொடி
இந்நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கட்சிகளின் அலுவலகங்கள், பொதுமக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். இதற்காக பொதுமக்களுக்கு மூவர்ணக் கொடி தடையில்லாமல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுமாறு பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிகளும் அழைப்பு
நாடு முழுவதும் பாஜக உள்ளிட்ட கட்சிகள், தங்கள் தொண்டர்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் அறிவித்திருந்தார்.

அதிமுகவினர்
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி அதிமுகவினர் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் அதிமுக கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடிக்குக் கீழே தேசியக்கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சி கொடிக்கு கீழே
இந்நிலையில், கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் இந்து முன்னணி மற்றும் அதிமுக கொடி கம்பங்களில் கட்சிக் கொடிகளுக்கு கீழாக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கட்சி கொடிகளுக்கு கீழ் கட்டப்பட்டிருந்த தேசிய கொடிகளை அகற்றினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விதி
தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது. தேசியக்கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது என்பது விதியாகும். அதனை மீறி கோவையில் கட்சிக் கொடிகளோடு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதால் தான் அகற்றப்பட்டுள்ளது.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications