பொள்ளாச்சி.. திருநாவுக்கரசுக்காக களமிறங்கிய தாய் லதா.. இங்கதான் இருக்குது பிரச்சினை!
Recommended Video

கோவை: தனது மகன் தவறு செய்யவில்லை என்று பொள்ளாச்சியை உலுக்கிய பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் தாய், லதா நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்களுடன், வாக்குவாதம் செய்த வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கில், திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதுமே, சமூகவலைத்தளங்களில் முதலில் பரவிய கருத்து, இந்த விஷயத்தால் அவர்களைப் பெற்றவர்கள் எவ்வளவு வலியால் துடிப்பார்கள் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் நிஜத்தில் நடப்பது வேறு.
ஃபேஸ்புக்கில் திருநாவுக்கரசு, இவ்வளவு ஆக்டிவாக இருந்தும், இத்தனை பேர் குற்றம்சாட்டியும் எனது மகன் தவறு செய்யவில்லை என்று திருநாவுக்கரசு தாய் வாக்குவாதம் நடத்தியுள்ளார்.

முரட்டுத்தன பாசம் தேவையா
அவரிடம் பொதுமக்கள் வாய் தகராறு செய்து திட்டி அனுப்பி வைத்தனர். உங்கள் மகனால் பொள்ளாச்சியில் உள்ள அத்தனை பேரும் நாண்டுகிட்டதான் செய்யனும் என்று ஒருவர் கூறிய வார்த்தை லதாவின் காதுகளுக்குள் விழுந்ததாகவே தெரியவில்லை. இந்த முரட்டுத்தனமான பாசம்தான், பிள்ளைகளுக்கு கடிவாளம் இல்லாமல் வளரச்செய்து விடுகிறதோ என்ற எண்ணம் இந்த சம்பவத்தின் மூலம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

நுகர்வு கலாச்சார அடிமைகளான பெற்றோர்
பிள்ளைகளை கண்டித்து வளர்க்க வேண்டும் என்று வழிவழியாக வந்த பிள்ளை வளர்ப்பு முறை மாறி, சர்வதேச நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி ஆடம்பரமாக வாழ வைப்பதும், கண்டிக்காமலும் பிள்ளைகளை வளர்ப்பதும்தான் நல்ல வளர்ப்பு என்ற மனநிலை சமூகத்தில் வேரோடிப் போயுள்ளது தான் இது மாதிரியான குற்றவாளிகளை உருவாக்கி விடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தஷ்வந்த் தெரியுமா
இந்த நேரத்தில் ஒரு குட்டி பிளாஷ்பேக்கை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். ஹாசினி என்று சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து தஷ்வந்த் என்ற வாலிபரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீங்கள் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். தஷ்வந்த்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் காவல்துறை அடைத்தது.

தாயையே கொன்ற தஷ்வந்த்
அப்போது எவ்வளவு செலவு செய்தாவது எனது மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டவர் தஷ்வந்த் தந்தை. அதேபோன்று சொத்துக்களை விற்று, வழக்கை நடத்தி குண்டர் சட்டத்தில் இருந்து ஜாமீனில் வெளியே கொண்டுவந்தனர் அவரது பெற்றோர்கள். அப்புறம் என்ன நடந்தது என்பது வரலாறு. வீட்டில் தனது தாய் சரளாவை, தலையில் கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பி ஓடினார் தஷ்வந்த்.

ஆதரவளிப்பவர்களும் குற்றவாளிகள்
இந்த வழக்கில் தற்போது தஷ்வந்த் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொடூரனாக நிற்கிறார். இதிலிருந்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். குற்றம் செய்பவர் மட்டுமல்ல, குற்றம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் குற்றவாளிகள் தான். அந்த ஆபத்து அவர்களையே எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications