சூப்பர் சம்பவம்.. வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.. இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் பயின்ற 3 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டன.
கொரோனா 2ஆம் அலை குறைந்த பின்னரே மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டன.

நீட் தேர்வு
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் +2 தேர்வுகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்று. இங்குத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

வால்பாறை தேயிலைத் தோட்டங்கள்
பள்ளிப் படிப்பைத் தாண்டி கல்லூரி படிப்பு படிக்க முடியாததால், பல ஆண்டுகளாக இங்குள்ள குழந்தைகளும் தேயிலைத் தோட்டங்களிலேயே பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இந்தச் சூழலில் தான் கடந்த 2008ஆம் ஆண்டில் இப்பகுதியில் கல்லூரி திறக்கப்பட்டது. அந்த கல்லூரி தற்போது அரசு கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாகக் கல்லூரி படிப்பைப் படிக்கும் சூழல் ஏற்பட்டது.

மூவர் தேர்ச்சி
இந்நிலையில் வால்பாறை நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த 3 மாணவிகள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் இந்தத் தேர்வில் ஈட்டியார் எஸ்டேட்டை சேர்ந்த தர்ஷினி, பச்சைமலை எஸ்டேட்டை சேர்ந்த மகாலட்சுமி, உருளிக்கல் பெரியார் நகரைச் சேர்ந்த மிதுனா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பொதுமக்கள் பாராட்டு
இவர்களின் வெற்றிக்கு உதவியாக வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன், ஆசிரியைகள் சுமதி, கவிதா, சரஸ்வதி ஆகியோர் நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி அளித்தனர். அவர்களுக்கு மாணவியும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வால்பாறை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications