Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் சம்பவம்.. வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.. இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் பயின்ற 3 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டன.

கொரோனா 2ஆம் அலை குறைந்த பின்னரே மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டன.

 நீட் தேர்வு

நீட் தேர்வு

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் +2 தேர்வுகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்று. இங்குத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

 வால்பாறை தேயிலைத் தோட்டங்கள்

வால்பாறை தேயிலைத் தோட்டங்கள்

பள்ளிப் படிப்பைத் தாண்டி கல்லூரி படிப்பு படிக்க முடியாததால், பல ஆண்டுகளாக இங்குள்ள குழந்தைகளும் தேயிலைத் தோட்டங்களிலேயே பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இந்தச் சூழலில் தான் கடந்த 2008ஆம் ஆண்டில் இப்பகுதியில் கல்லூரி திறக்கப்பட்டது. அந்த கல்லூரி தற்போது அரசு கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாகக் கல்லூரி படிப்பைப் படிக்கும் சூழல் ஏற்பட்டது.

 மூவர் தேர்ச்சி

மூவர் தேர்ச்சி


இந்நிலையில் வால்பாறை நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த 3 மாணவிகள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் இந்தத் தேர்வில் ஈட்டியார் எஸ்டேட்டை சேர்ந்த தர்ஷினி, பச்சைமலை எஸ்டேட்டை சேர்ந்த மகாலட்சுமி, உருளிக்கல் பெரியார் நகரைச் சேர்ந்த மிதுனா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 பொதுமக்கள் பாராட்டு

பொதுமக்கள் பாராட்டு

இவர்களின் வெற்றிக்கு உதவியாக வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன், ஆசிரியைகள் சுமதி, கவிதா, சரஸ்வதி ஆகியோர் நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி அளித்தனர். அவர்களுக்கு மாணவியும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வால்பாறை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+