மாமதுரை காண வந்த மருதிருவர்! செக்கிழுத்த சிறை காண வந்த வ.உ.சி -நெகிழ வைத்த அரசின் அலங்கார ஊர்தி!
கோவை/ மதுரை: தமிழக அரசின் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் கோவை வஉசி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் வீரத்தாய் வேலுநாச்சியார், தேசவிடுதலைக்காக ஒட்டுமொத்த குடும்பத்தார் உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் தூக்கு மேடையேறிய மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவங்களுடனான அலங்கார ஊர்தி மதுரைக்கு வந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்களுடனான தமிழக அரசின் ஊர்வலங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Recommended Video
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழக உலா
இதையடுத்து 3 அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் வலம் வரும் நிகழ்வை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு ஊர்தி கோவைக்கு வந்தடைந்தது. இந்த ஊர்தியில் மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராக வாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த ஊர்தியில் சுதேசி கப்பலும் சிதம்பரனார் சிறையில் செக்கிலுக்கும் காட்சிகளும் பாரதியார், சிதம்பரனாரின் சுதந்திர உணர்வு வரிகளும் இடம்பெற்றுள்ளன.

கோவையில் அலங்கார ஊர்தி
இந்த ஊர்தி தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வ.உ.சி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து பார்வையிட்டார். ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ஊர்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பார்வையிட வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆர்வம்
முதல் நாளான இன்றே பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பலரும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். முதல் நாளான இன்று பரதநாட்டியம், நிமிர் குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரையில் வீரத்தாய் வேலுநாச்சியார், மருதிருவர்
இதேபோல் வீரத்தாய் வேலுநாச்சியார், தேசவிடுதலைக்காக ஒட்டுமொத்த குடும்பத்தார் உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் தூக்கு மேடையேறிய மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவங்களுடனான அலங்கார ஊர்தி மதுரைக்கு வந்தது. பூமழை மொழிந்து தங்களது மாமன்னர் மருது சகோதரர்களையும் வீரத்தாய் வேலுநாச்சியாரையும் பொதுமக்கள் வரவேற்ற காட்சி நெகிழ வைத்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications