பழனி முருகனை வேண்டுகிறேன்.. எல்.முருகனுக்கு ஜண்டா போட்ட செங்கோட்டையன்.. அவிநாசியில் அதோகதி
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஜனநாயகன்படம் கசிய மத்திய அமைச்சர் எல்.முருகன் தான் காரணம், அவரை தோற்கடிக்க பழனி முருகனை வேண்டுகிறேன் என்று செஙகோட்டையன் கூறியுள்ளார்.
கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் தவெக கவுண்டம்பாளையம் வேட்பாளர் கனிமொழி, மற்றும் மேட்டுப்பாளையம் வேட்பாளர் சுனில் ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

சிந்தாமல் சிதறாமல்
தொடர்ந்து கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், "புதிய தலைமை தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. தற்போதுள்ள ஆட்சியின் அவலத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். தீய சக்தியாகவும், ஊழல் ஆட்சியாகவும் உள்ள திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பது மக்களின் ஆசையாக உள்ளது.
மக்களின் ஆசையை நிறைவேற்றும் ஒரே இயக்கம் தவெக தான். எங்கள் தலைவர் விஜய் தான் மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவார். நாம் தேர்தல் பணிகளை சரியாக செய்ய வேண்டும். மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். அந்த வாக்கை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டியது நம்முடைய கடமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக்கூடிய ஒரே இயக்கம் தவெக.
திமுக டோக்கன்
நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வருகிறேன். தேர்தல் களத்தில் பத்து முறை தோற்ற பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது என்று மக்களே சொல்கிறார்கள். அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம். அது வீணாகிவிடும். ஆகவே மாற்றத்தை விரும்புவோர் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திமுக சார்பில் 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்துள்ளது. எட்டு கொடுத்தால் முடிந்துவிட்டது. அது என்றைக்கும் ஓடாது. இதில் திமுக வெற்றி பெற முடியாது என்பது தெரிகிறது. எனவே நாம் யாரும் கவலைப்பட வேண்டாம். நம்மிடம் உழைப்பு உற்சாகம் இருக்கிறது. மக்கள் ஆதரவு அனைத்தும் உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன் என்று தலைவர் விஜய் கூறியுள்ளார்,
எல் முருகனை தோற்கடிக்க பழனி முருகன்
இதை தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் கூற முடியாது. ஜனநாயகன் திரைப்படம் சமூகவலைதளங்களில் கசிந்துள்ளது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளார்கள். அதை யார் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த துறைக்கான அமைச்சர் யார் என்று பார்க்க வேண்டும். மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தான் துறை அமைச்சர்.
எல்.முருகனை தண்டிக்க வேண்டும் என்று பழனி முருகனை வேண்டுகிறேன். எல் முருகனை தோற்கடித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு ஒரு தலைவர் நமக்காக வருகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications