“மத்திய அரசு எங்கயுமே இந்தியை திணிக்கல” - அதே மேடையிலேயே அமைச்சர் பொன்முடிக்கு பதில் சொன்ன ஆளுநர்!
கோவை: எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் பொன்முடிக்கு பதிலளிக்கும் வகையில் அதே மேடையில் பேசினார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். ஆளுநர் தமிழ்நாட்டின் உணர்வுகளை புரிந்துகொண்டு எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன். மாநிலத்தின் உணர்வுகளை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும்" எனப் பேசினார்.
பின்னர் இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் நீங்கள் புதிய பொறுப்புகளை சந்திக்க இருக்கிறீர்கள்.
சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளைப் பெற முடியாது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் என்ன சாதித்தோம் என்ன சாதித்திருக்கிறோம்? நாடு நூறாவது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும்போது இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக இருக்கும்.
இன்னும் சில வருடங்களில் நாடு நல்ல நிலையை எட்டும். சுகாதார வசதிகள், நல்ல குடிநீர், மின்சாரம், கல்வி, உணவு என அனைத்திலும் இந்தியா தன்னிறைவு அடையும். குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரட்டிப்பாகி இருக்கிறது.
இந்த வெற்றிப் பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. மாநில மொழிகளும் வளர வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது." எனப் பேசினார்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications