Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி ஒன்று முதல் சிக்கன் விலையும் உயரப்போகுது? கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

கோவை: கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் பலர் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். பொதுவாக இப்படியான சூழலில் சிக்கன் விலை குறைந்துவிடும். முட்டை விலையும் கடுமையாக சரியும். ஆனால் முட்டை விலை பெரிய அளவில் தினமும் உயர்ந்து வருகிறது. சிக்கன் விலை குறையவே இல்லை.. 280 என்கிற அளவில் உள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் 1-ந்தேதி முதல் வளர்ப்பு கூலி உயர்வு கேட்டு உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் சிக்கன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி மற்றும் தமிழக மாநில விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், கோவை மாவட்டம் அன்னூரில் நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் எம்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டார்க்ள். பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எம்.மகாலிங்கம் கூறுகையில், 5 ஆயிரம் கோழிகளை வளர்க்க செலவுகள் முன்பைவிட கடுமையாக அதிகரித்து வருகிறது.

Will chicken prices also increase from January 1st What do the broiler chicken producers say

40 நாட்களுக்கு ஒரு லோடு தென்னை நார் பரப்ப தேவையான விலை ரூ.8000 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.24 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. எங்களுக்கு வழக்கமாக வரும் மின்சார கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். அதன் விலை தற்போது ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால் பி.சி.சி. நிறுவனங்கள் கோழி வளர்ப்புக்கான செலவு தொகையை உயர்த்தி வழங்க மறுக்கின்றன.

கோழி வளர்ப்பு கூலியாக கிலோவுக்கு ரூ.20-ம், நாட்டு கோழிக்கு ரூ.25, காடை வளர்ப்புக்கு ஒரு காடைக்கு ரூ.7-ம் வழங்க வேண்டும். கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் அரசு வழங்க வேண்டும். இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். ஏற்கனவே இருக்கும் கோழிகளை விற்பனைக்கு அனுப்பி விட்டு, வளர்ப்பதற்கான கோழிகளை பெற மாட்டோம்" இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி தேவைப்படுகிறது ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி தேவைப்படும் நிலையில் பண்ணையாளர்களின் உற்பத்தி நிறுத்த போராட்டம் கோழி இறைச்சி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன் விலை அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+