மாட்டு கொட்டகைக்கு வரும் நபர்கள்.. சூலூர் ரம்யா அரிவாளால் வெட்டி கொலை.. போலீஸில் சரணடைந்த கொலையாளி
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரம்யா என்ற இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் கொலையாளி சரணடைந்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பீடம்பள்ளி கள்ளித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது தந்தை பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டுப் பிரிந்து வந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையை பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரம்யா என்ற இளம்பெண்ணுக்கு வாடகை விட்டுள்ளார்.

இளம்பெண் ரம்யாவும் அந்த மாட்டுக் கொட்டகையில் நாய்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களாக ரம்யா அந்த மாட்டுக் கொட்டகையிலேயே தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ரம்யாவைப் பார்ப்பதற்காக அவ்வப்போது ஆட்டோவில் சிலர் வந்து சென்றுள்ளனர். இதனை ராஜேந்திரன் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் அடுத்தடுத்து ஆட்டோவில் நபர்கள் வருவது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை.
இதையடுத்து, ரம்யாவிடம் கொட்டகையை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல ரம்யாவைப் பார்ப்பதற்காக சிலர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளனர். அப்போது, ராஜேந்திரன் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்துள்ளார்.
இதனால், ராஜேந்திரனுக்கும், ரம்யா தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டுக்குள் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து ரம்யாவின் கழுத்தில் வெட்டி படுகொலை செய்தார். பின்னர், கொலை செய்த அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரம்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டு கொட்டகை தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications