இலங்கை கிரிக்கெட் அணி தடை பின்னணியில் 'இந்தியாவின் ஷா'.. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகீர்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்ததன் பின்னணியில் 'இந்தியாவின் ஷா' இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை மிக மோசமாக விளையாடி அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது. இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த மோசமான ஆட்டம் இலங்கையில் பெரும் அரசியல் சுனாமியையே உருவாக்கிவிட்டிருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது சரமாரியான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுவிட்டது. இது தொடரபாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
"கிரிக்கெட் திருடர்கள் ஒன்று சேர்ந்து நமது நாட்டில் கிரிக்கெட்டை தடை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வாடகை செலுத்தும் சினமன் ஹோட்டலில் உள்ள ஒரு அலுவலகத்தில் கள்ள கூட்டாளி கும்பல் ஒன்று கூடி எப்படியேனும் "இந்தியாவில் ஷா"வுடன் பேசி 72 மணி நேரத்திற்குள் நமது கிரிக்கெட் அணிக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட ஆலோசிக்கப்பட்டுள்ளது; இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகம் என்ற போர்வையில் இவர்கள் திருடுகின்றனர் என பேசியிருந்தார். (நன்றி: வீரகேசரி நாளிதழ்).
இதேபோல இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பேசுகையில், "கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எனவே இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது" என குற்றம்சாட்டி இருந்தார். (நன்றி: வீரகேசரி நாளிதழ்).
இந்த பேச்சுகள் ஒருபக்கம் இருக்க, இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் மிக மிக பாதுப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியில் அரசு தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டுவிட்டது. இலங்கை அணியைப் போலவே பாகிஸ்தான் அணியும் உள்நாட்டு அரசியல் குழப்பத்தில் சிக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications