இலங்கை அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்.. தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே!
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இலங்கை இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். பின்னர் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இருந்தும் இலங்கையில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மக்கள் போராட்டம்
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் இதுவரை நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதனிடையே அதிபருக்கு எதிராக போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், கொழும்பு வரும் சாலைகள் மூடப்பட்டும், பெட்ரோல் நிலையங்கள் அடைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் போராட்டம்
இதனிடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகை மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலத்தில் பங்கேற்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு - பதற்றம்
விளையாட்டு மைதானங்களில், காலி இடங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் கொழும்புவில் உள்ள இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுவீசி, போராட்டத்தை கலைக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரும் பங்கேற்றுள்ளனர். மகரகாமா என்ற பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் காவல்துறையினரும் பங்கேற்றதால், அசாதாரண சூழல் நிலவுகிறது.

அதிபர் தப்பியோட்டம்
இதனிடையே போராட்டக்காரர்களில் சிலர் அதிபர் மாளிகை உள்ளே புகுந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடியுள்ளார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications