பேருந்து நிலையத்தில் பதுக்கப்பட்டிருந்த 87 டெட்டனேட்டர்கள்.. திக் பிளான்.. இலங்கையில் தொடர் பதற்றம்
இலங்கையில் கொழும்புவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.
கொழும்பு: இலங்கையில் கொழும்புவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.
ஈஸ்டர் பண்டிகையான நேற்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என்ன உத்தரவு
இந்த நிலையில் இலங்கையில் இன்று போலீசார் கொழும்பு முழுக்க சோதனை நடத்தினார்கள். அங்கு தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவில்லை. மீறி வெளியே வரும் மக்களை போலீசார் கடுமையாக விசாரித்து வருகிறார்கள்.

கடும் சோதனை
இதை வைத்து தற்போது கொழும்பு முழுக்க சல்லடை போட்டு சோதனை நடக்கிறது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் என்று எல்லா இடங்களிலும் கடுமையான சோதனை நடந்து வருகிறது. ராணுவம் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் என்ன
இந்த சோதனையின் ஒரு கட்டமாக இன்று இலங்கையில் கொழும்புவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது. பேருந்து ஒன்றில் கீழ் பக்கம் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

டெட்டனேட்டர்களை பறிமுதல்
டெட்டனேட்டர்களை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்தனை பாதுகாப்பை மீறி இது எப்படி பேருந்துக்கு அடியில் வைக்கப்பட்டது என்று விசாரித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications