மக்கள் குறைதீர் கூட்டத்தில்..செல்போனில் ஹாயாக சமையல் வீடியோ பார்த்த அரசு அதிகாரி.. மக்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண் அதிகாரி செல்போனில் சமையல் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.

மாவட்ட கலெக்டர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்ட புகார் பெட்டியில் மனுக்கள் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதிகாரிகள் அலட்சியம்

அதிகாரிகள் அலட்சியம்

பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக வழங்கி கொண்டு இருந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் சிலர் செல்போன்களில் உரையாடிக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

சமையல் வீடியோ

சமையல் வீடியோ

இதில் ஆதி திராவிட நலத்துறை அதிகாரி சுமதி என்பவர் தனது செல்போனில் சமையல் செய்யும் வீடியோக்களை பார்த்து ரசித்துகொண்டிருந்தார். பல மாதங்கள் கழித்து நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மற்றொரு சம்பவம்

மற்றொரு சம்பவம்

அம்பத்தூர் பானு நகரை சேர்ந்தவர் ரோஸ்மேரி(72). இவரது கணவர் சேவியர் இறந்துவிட்டார் இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரோஸ்மேரி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு தினமும் மகன்கள் மூன்று வேளை சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையில், ரோஸ்மேரி தனது மகளிடம், நான் எல்லோருக்கும் சுமையாக இருக்கிறேன் என கடந்த சில தினங்களாக அழுது புலம்பியுள்ளார்.

 மூதாட்டி

மூதாட்டி

இந்நிலையில் நேற்று மதியம் ரோஸ்மேரி வீட்டு கதவை உட்புறமாக பூட்டி கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு ரோஸ்மேரி உடல் கருகி இறந்து கிடந்தார். தகவலறிந்து, அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+