8 ஆண்டு மோடி ஆட்சியில் 10 ஆயிரம் மதக்கலவரங்கள்! ‛பகீர்’ ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட காங்கிரஸ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ரிப்போர்ட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 10,000 மதக்கலவரங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கட்சி மத்தியில் 2014ல் ஆட்சியை பிடித்தது. தொடர்ச்சியாக 8 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட வில்லை என தொடர்ச்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

காங்கிரஸ் ரிப்போர்ட் கார்டு
இந்நிலையில் தான் 8 ஆண்டு ஆட்சியை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் சார்பில் ‛8 சால் 8 சல் பாஜ்பா சர்க்கார் விபால்' என ரிப்போர்ட் கார்டு டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கன், செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இந்த ரிப்போர்ட் கார்டை வெளியிட்டனர். இதையடுத்து இருவரும் கூறியதாவது: :

10000 மதக்கலவரங்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் சுமார் 10000 ஆயிரம் மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. மதத்தை முன்வைத்து வன்முறை, கலவரங்கள் நடந்தால் பாஜக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் இதுதான் பாஜகவினர் செயல் திட்டமாகும்.

பேரழிவு கொள்கைகள்
பாஜகவினரின் பேரழிவு கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தின் மீது ஒன்றன் பின் ஒன்றாக மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. ஒரு காலத்தில் வேகமாக வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரம் தற்போது பாஜகவின் 8 ஆண்டுகா்கால ஆட்சியில் பெரும் சரிவில் இருக்கிறது. இதற்கு தவறான பொருளாதார கொள்கை, ஆட்சிமுறை தான் காரணம்.

மக்களை ஏமாற்றும் அரசு
பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றுவதில் சாதனை செய்துள்ளது. கலால் வரியை உயர்த்துவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தது. தற்போது அதனை குறைத்து மக்கள் சார்பு அரசாக காட்டி கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதகிரித்துள்ளது.
Recommended Video

பொருளாதார நெருக்கடி
மேலும் இந்தியாவின் 45 ஆண்டுகால சாதனையை பாஜக முறியடித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. மேலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் கரைந்து வருவதால் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது'' என்றனர்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications