குழந்தைகளில் 45% பேருக்கு இரட்டை இலக்க எண் தெரியவில்லை.. டெல்லியில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி!
டெல்லி: டெல்லி காப்பகங்களில் வசிக்கும் குழந்தைகளில் 45 சதவீதம் பேருக்கு இரட்டை இலக்க எண் என்றும் 25 சதவீதம் பேருக்கு எண்களே தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கணக்கெடுப்பு தெற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களின் 30 குழந்தைகள் இல்லங்களில் நடத்தப்பட்டது. 6 முதல் 18 வயதுக்குட்பட்ட 400 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமை ஆணையம்
டெல்லி குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் சேர்ந்து கொரோனா காலகட்டத்தில் இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளன. இதில் 100 குழந்தைகள் டெல்லியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் படிப்பவர்கள், மூன்றில் ஒருங்கு தென், தென்கிழக்கு டெல்லியில் படிப்பவர்கள். ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் 12-15 வயதுக்குட்பட்டவர்களே ஆவார்கள்.

இந்தி படிக்க தெரியவில்லை
குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை பலப்படுத்துதல் மற்றும் கணிதத்திறமையை மேம்படுத்துவதற்கே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 37.5 சதவிகித குழந்தைகளுக்கு சரிவர இந்தி படிக்க தெரியவில்லை என்பதும் 18 சதவிகிதம் குழந்தைகளுக்கு இந்தி எழுத்துக்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் கிடைத்துள்ளன.

25 சதவீத குழந்தைகள்
25 சதவீதக் குழந்தைகளுக்கு கணிதத்தில் எண்கள் குறித்த அடையாளமே தெரியவில்லை, 45 சதவீதம் குழந்தைகளுக்கு கணிதத்தில் இரட்டை இலக்க எண் எதுவென்று கேட்டால் தெரியவில்லை என்பதும் அதிர்ச்சி மிக்க தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனுராக் குந்து கூறியதாவது:- கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி குறித்து தென், தென்கிழக்கு டெல்லியில் உள்ள காப்பகங்களில் ஆய்வு நடத்தினோம்.

பயிற்சியை தொடங்கி விட்டோம்
இந்த ஆய்வின் மூலம் கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு அதற்கான பயிற்சியைத் தொடங்கிவி்ட்டோம். குழந்தைகள் 100 சதவீதம் இந்தி மொழியை சரளமாகப் படிக்க வேண்டும், கணித்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல்,வகுத்தல் போன்ற அடிப்படையை தடையின்றி கற்க வேண்டும் என்பதற்கான பயிற்சியை தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications