இந்த 5 மாநிலங்களில் கட்டுக்கடங்காத கொரோனா.. எச்சரிக்கும் மத்திய அரசு.. லிஸ்டில் உள்ள தேர்தல் மாநிலம்
டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாம், சண்டிகர் ஆகிய மாநிலங்களுடன் தேர்தல் நடைபெறும் கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் நாட்டின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனா குறித்த செய்திகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் மக்கள் மாஸ்க்குகளை அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டுதல்களை முறைாக பின்பற்றாமல் இருப்பதே கொரோனா பரவல் அதிகரித்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

5 மாநிலங்கள்
இந்நிலையில் தற்போது நாட்டிலுள்ள 80% கொரோனா நோயாளிகள் ஐந்து மாநிலங்களில் மட்டும் உள்ளதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தற்போதுள்ள நாட்டிலுள்ள கொரோனா நோயாளிகளில் சுமார் 61% மகாராஷ்டிராவில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவிரக் கர்நாடகா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
மேலும், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழகம், குஜதார், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. புதிதாக உறுதி செய்யப்படும் கொரோனா வழக்குகளில் 84.73% இந்த மாநிலங்களில் இருப்பதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 53, 158 பேருக்கு நாட்டில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,52,566ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் நேற்று மட்டும் 355 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான், ஒடிசா, லடாக் உள்ளிட்ட 14 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனா காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழக்கவில்லை.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்v
கொரோனா பரவல் அதிகரித்துள்ள அதேநேரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 6.30 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் சுமார் 90 லட்சம் பேருக்குத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications