5 மாநில சட்டசபை தேர்தல்கள்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மும்முர ஆலோசனை
டெல்லி: தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல்கள் தொடர்பாக டெல்லியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான பிரசாரம் களைகட்டியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக அண்மையில் இந்த 5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்களையும் நியமித்திருந்தது. மேலும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பாஜக தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் இதுவரை நடைபெறாமல் இருந்தது.
Delhi: Prime Minister Narendra Modi inaugurates a meeting of the BJP national office bearers at the NDMC convention centre. The meeting will be chaired by party president JP Nadda
— ANI (@ANI) February 21, 2021
PM will also address the BJP national office bearers. pic.twitter.com/2TLekSBuGJ
இந்த நிலையில் தேசிய நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.