தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கு.. கவலை மிக முக்கிய காரணமாம்.. ஆய்வு அடித்து சொல்கிறது!
டெல்லி: தடுப்பூசிக்கு பிந்தைய 30% க்கும் அதிகமான பக்கவிளைவுகளுக்கு கவலை ஒரு முக்கிய காரணம் என்று தேசிய நோய்த்தடுப்பு குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கொரோனாவை தடுப்பதில் தடுப்பூசி மட்டும் தான் பேராயுதம் எனபதால் பல்வேறு நாட்டு மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் மிகவும் தயக்கம் காட்டி வந்தனர்.ஆனால் தற்போது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற பிரதான தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு செலுத்தப்படுகிறது.

பக்கவிளைவுகள்
தடுப்பூசி போட்ட பிறகு பெரும்பாலானவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஒரு நபருக்கு ஏற்படும் எதிர்பாராத மருத்துவப் பிரச்னைகளைத் தான் பக்க விளைவு என்று அழைக்கிறோம். பக்க விளைவுகளுக்கு தடுப்பு மருந்தின் காரணமாகவும் இருக்கலாம். தடுப்பூசி செயல்முறை அல்லது வேறு ஏதேனும் காரணமாகவும் இருக்கலாம்.

ஆய்வு நடத்தியது
ஒரு டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கும், இரண்டு டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம், மிதமான காய்ச்சல், உடல் வலி, பதற்றம், ஒவ்வாமை, அரிப்பு ஆகியவை பக்க விளைவுகளாக வெளிப்படலாம். இந்த நிலையில் தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தேசிய நோய்த்தடுப்பு குழு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

கவலை முக்கிய காரணம்
அப்போது தடுப்பூசிக்கு பிந்தைய 30% க்கும் அதிகமான பக்கவிளைவுகளுக்கு கவலை ஒரு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 88 பக்க விளைவுகளில் 61 தடுப்பூசிக்கு தொடர்ச்சியாக காரணம் இருக்கிறது என்றும் 37 தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக ஏற்பட்டது என்றும் 22 கவலை தொடர்பாக எற்பட்ட பக்கவிளைவுகள் என்றும் 2 தடுப்பூசி செல்லுவதில் ஏற்பட்ட பிழை தொடர்பாக ஏற்பட்டது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஊசிகளின் பயம்
ஊசிகளின் பயம் காரணமாக தடுப்பூசி எடுப்பதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக கவலை இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கோவாக்சினை விட, கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்களுக்கு அதிக பக்கவிளைவுகள் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றன என்று தேசிய நோய்த்தடுப்பு குழு ஆய்வு தெரிவிக்கிறது.

மனநல மருத்துவர் சொல்வது என்ன?
இது தொடர்பாக மனநல மருத்துவருமான டாக்டர் ஜிதேந்தர் நாக்பால் கூறுகையில், கவலை என்பது தடுப்பூசிக்கு பிந்தைய கடுமையான பக்கவிளைவுகளுக்கான காரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. தடுப்பூசிகள் புதியவை மற்றும் அவற்றைப் பற்றி போதுமான பக்க விளைவுகள் தெரியவில்லை என்பதால், அதன் விளைவைப் பற்றி கவலைப்படுவதும் மறுபரிசீலனை செய்வதும் இயற்கையானது. இது தவிர தடுப்பூசி தொடர்பான வதந்திகளும் மக்களிடம் கவலையைத் தூண்டுகின்றன என்று தெரிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications