ம.பி, சத்தீஸ்கர்- காங்கிரஸ்; ராஜஸ்தான் - பாஜக; தெலுங்கானா- பிஆர்எஸ் வெல்லும்- ஏபிபி அதிரடி சர்வே!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்; ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமையும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு. மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும் தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைக்கும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்.
5 மாநிலங்களின் தேர்தல் களநிலவரம் தொடர்பான ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்:

தெலுங்கானா:
மொத்தம் 119 இடங்கள்
பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள்
பிஆர்எஸ்: 49 முதல் 61 இடங்கள்
காங்கிரஸ்: 43 முதல் 55 இடங்கள்
பாஜக - 5 முதல் 11 இடங்கள்
இதர கட்சிகள் : 4 முதல் 10 இடங்கள்
ராஜஸ்தான்:
மொத்தம் 200 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு தேவை 111 இடங்கள்
பாஜக: 114 முதல் 124 இடங்கள்
காங்கிரஸ்: 67 முதல் 77 இடங்கள்
பகுஜன் சமாஜ் கட்சி: 0 முதல் 4 இடங்கள்
இதர கட்சிகள்: 5 முதல் 9 இடங்கள்
மத்திய பிரதேசம்:
மொத்தம் 230 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள்
காங்கிரஸ்: 118 முதல் 130 இடங்கள்
பாஜக: 99 முதல் 111 இடங்கள்
பகுஜன் சமாஜ் கட்சி: 0 முதல் 3 இடங்கள்
இதர கட்சிகள்: 0 முதல் 2 இடங்கள்
சத்தீஸ்கர் மாநிலம்:
மொத்த தொகுதிகள்: 90
பெரும்பான்மைக்கு தேவை: 46 இடங்கள்
காங்கிரஸ்: 45 முதல் 51 இடங்கள்
பாஜக: 36 முதல் 42 இடங்கள்
இதர கட்சிகள்: 2 முதல் 5 இடங்கள்
மிசோரம் மாநிலம்
மொத்தம் 40 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள்
மிசோ தேசிய முன்னணி: 17 முதல் 21 இடங்கள்
ஜோரம் மக்கள் இயக்கம்: 10 முதல் 14 இடங்கள்
காங்கிரஸ்: 6 முதல் 10 இடங்கள்
மொத்தம் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் 2 மாநிலங்களிலும் பாஜக 1 மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும். தெலுங்கானாவிலும் மிசோரம் ஆளும் மாநில கட்சிகள் ஆட்சியை தக்க வைக்கும் என்பதுதான் ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பின் முடிவுகள்.












Click it and Unblock the Notifications