உடம்பெல்லாம் புளூ கலரா மாறிடுச்சு.. 5 நிமிஷம்தான் கட் பண்ணேன்.. பகீரை கிளப்பிய ஆஸ்பத்திரி ஓனர் ஆடியோ
டெல்லி: "ஒருபக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை.. இன்னொரு பக்கம் நோயாளிகளை வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லியும் யாருமே வரவில்லை.. அதனால் நான் ஒரு ஐடியா பண்ணேன்.. ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் செத்து போவங்க.. யாரெல்லாம் பிழைப்பாங்கன்னு யோசிச்சேன்.. அதனால, 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினேன்.. திடீர்னு 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற ஆரம்பிச்சிடுச்சு.. அவங்க உடம்பெல்லாம் புளூ கலரா மாறிடுச்சு.." என்று ஒரு ஆஸ்பத்திரி ஓனர் பேசும் ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த முறை 2வது பரவல் ஆரம்பித்ததில் இருந்தே, ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்து ஆரம்பித்துவிட்டது.. அதிலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது...
இது தொடர்பாக செய்திகள் வீடியோ வெளிவந்தும், உபி முதல்வர் மறுத்தார்.. யாராவது ஆக்சிஜன் இல்லைன்னு பொய் சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று வார்ன் செய்தார்... ஆனால், அலகாபாத் ஹைகோர்ட் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக உபி அரசை கடுமையாக சாடியதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

ஆஸ்பத்திரி ஓனர்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஆக்ராவில் ஒரு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் ஆடியோவாக வெளிவந்து தூக்க வாரி போட்டுள்ளது.. அந்த ஆஸ்பத்திரி ஓனர் ஆடியோவில் பேசியவதாது: "சொல்ல முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது... நோயாளிகளை கூட்டிட்டு போய்டுங்க என்று மக்களை கேட்டுக்கொண்டோம்.. ஆனால், யாருமே வந்து கூட்டிட்டு போகல. அதனால், நானே ஒரு ஐடியா செய்தேன்..

மூச்சு திணறல்
ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள்.. யாரெல்லாம் பிழைப்பார்கள் என்று டெஸ்ட் செய்ய முடிவெடுததேன்.. அதனால், ஏப்ரல் 26-ம்தேதி காலை 7 மணிக்கு 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினோம்... இதை பற்றி யாருக்குமே வெளியில் தெரியாது.. உடனே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற தொடங்கியது.. அவங்க உடம்பெல்லாம் நீல நிறமாக மாற ஆரம்பித்தது.. இதை பார்த்ததும், எப்படியோ பிழைக்க மாட்டாங்கன்னு முடிவு செய்தோம்..

சிலிண்டர்கள்
ஐசியூ வார்டில் உயிர் பிழைத்த 70 பேரையும், அவங்களையே சொந்தமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு வருமாறும் சொன்னோம்" என்று அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பற்றி அந்த ஆஸ்பத்திரி ஓனர் ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசும்போது சொன்னதாவது:

பேட்டி
"அந்த ஆடியோவில் பேசியது நான்தான்.. அதை மறுக்கவில்லை.. ஆனால் நான் பேசியது தப்பாக திரிக்கப்பட்டுள்ளது.. அபாயத்தில் உள்ள நோயாளிகள் யார் என்று கண்டறிந்து அவங்களை பிழைக்க வைக்கவே, நாங்க இப்படி ஒரு போலியான டெஸ்ட் மேற்கொண்டோம்... 4 நோயாளிகள் ஏப்ரல் 26-ம்தேதியும், 3 பேர் ஏப்ரல் 27-ம்தியும் இறந்துவிட்டனர்..

நடவடிக்கை
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மொத்தம் 22 பேர் இறந்துவிட்டார்களா என்று உறுதியாக தெரியவில்லை' என்கிறார். இந்த விவகாரம் உபியில் வெடித்து கிளம்பி உள்ளது.. இது சம்பந்தமாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட், விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்..
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications