உடம்பெல்லாம் புளூ கலரா மாறிடுச்சு.. 5 நிமிஷம்தான் கட் பண்ணேன்.. பகீரை கிளப்பிய ஆஸ்பத்திரி ஓனர் ஆடியோ
டெல்லி: "ஒருபக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை.. இன்னொரு பக்கம் நோயாளிகளை வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லியும் யாருமே வரவில்லை.. அதனால் நான் ஒரு ஐடியா பண்ணேன்.. ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் செத்து போவங்க.. யாரெல்லாம் பிழைப்பாங்கன்னு யோசிச்சேன்.. அதனால, 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினேன்.. திடீர்னு 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற ஆரம்பிச்சிடுச்சு.. அவங்க உடம்பெல்லாம் புளூ கலரா மாறிடுச்சு.." என்று ஒரு ஆஸ்பத்திரி ஓனர் பேசும் ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த முறை 2வது பரவல் ஆரம்பித்ததில் இருந்தே, ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்து ஆரம்பித்துவிட்டது.. அதிலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது...
இது தொடர்பாக செய்திகள் வீடியோ வெளிவந்தும், உபி முதல்வர் மறுத்தார்.. யாராவது ஆக்சிஜன் இல்லைன்னு பொய் சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று வார்ன் செய்தார்... ஆனால், அலகாபாத் ஹைகோர்ட் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக உபி அரசை கடுமையாக சாடியதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

ஆஸ்பத்திரி ஓனர்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஆக்ராவில் ஒரு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் ஆடியோவாக வெளிவந்து தூக்க வாரி போட்டுள்ளது.. அந்த ஆஸ்பத்திரி ஓனர் ஆடியோவில் பேசியவதாது: "சொல்ல முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது... நோயாளிகளை கூட்டிட்டு போய்டுங்க என்று மக்களை கேட்டுக்கொண்டோம்.. ஆனால், யாருமே வந்து கூட்டிட்டு போகல. அதனால், நானே ஒரு ஐடியா செய்தேன்..

மூச்சு திணறல்
ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள்.. யாரெல்லாம் பிழைப்பார்கள் என்று டெஸ்ட் செய்ய முடிவெடுததேன்.. அதனால், ஏப்ரல் 26-ம்தேதி காலை 7 மணிக்கு 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினோம்... இதை பற்றி யாருக்குமே வெளியில் தெரியாது.. உடனே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற தொடங்கியது.. அவங்க உடம்பெல்லாம் நீல நிறமாக மாற ஆரம்பித்தது.. இதை பார்த்ததும், எப்படியோ பிழைக்க மாட்டாங்கன்னு முடிவு செய்தோம்..

சிலிண்டர்கள்
ஐசியூ வார்டில் உயிர் பிழைத்த 70 பேரையும், அவங்களையே சொந்தமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு வருமாறும் சொன்னோம்" என்று அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பற்றி அந்த ஆஸ்பத்திரி ஓனர் ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசும்போது சொன்னதாவது:

பேட்டி
"அந்த ஆடியோவில் பேசியது நான்தான்.. அதை மறுக்கவில்லை.. ஆனால் நான் பேசியது தப்பாக திரிக்கப்பட்டுள்ளது.. அபாயத்தில் உள்ள நோயாளிகள் யார் என்று கண்டறிந்து அவங்களை பிழைக்க வைக்கவே, நாங்க இப்படி ஒரு போலியான டெஸ்ட் மேற்கொண்டோம்... 4 நோயாளிகள் ஏப்ரல் 26-ம்தேதியும், 3 பேர் ஏப்ரல் 27-ம்தியும் இறந்துவிட்டனர்..

நடவடிக்கை
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மொத்தம் 22 பேர் இறந்துவிட்டார்களா என்று உறுதியாக தெரியவில்லை' என்கிறார். இந்த விவகாரம் உபியில் வெடித்து கிளம்பி உள்ளது.. இது சம்பந்தமாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட், விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications