3 மாதங்களில் கொரோனா 3வது அலைக்கு சான்ஸ்.. டெல்லி எய்ம்ஸ்சில் குழந்தைகளுக்கு வாக்சின் டிரையல் ஆரம்பம்
டெல்லி: கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக, சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்த நிலையில், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனைகள் இந்தியாவில் துரிதமாக்கப்பட்டுள்ளன.
Recommended Video
பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் முதலில் இந்த சோதநைகளை ஆரம்பித்தது.
இப்போது இப்போது டெல்லியிலுள்ள புகழ் பெற்ற எய்ம்ஸ் பாரத் பயோடெக்கின் கோவிட் -19 தடுப்பூசி "கோவாக்சின்" மருத்துவ பரிசோதனைகளை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

பாட்னா எய்ம்ஸ்
மே 11 ஆம் தேதி குழந்தை மருத்துவ ஆய்வுகளைத் தொடங்க பாரத் பயோடெக் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து, எய்ம்ஸ்-பாட்னா ஏற்கனவே கோவாக்சினின் குழந்தைகளுக்கான பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

12 முதல் 18 வயது குழந்தைகள்
எய்ம்ஸ் பாட்னாவில், 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது, எய்ட்ஸ் டெல்லி 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் தடுப்பூசி பாதுகாப்பானதா என சோதிக்க உள்ளது.

டிசிஜிஐ ஒப்புதல்
முன்னதாக, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் கூறியதாவது, "2 முதல் 18 வயதுக்குட்பட்ட இரண்டாம் நிலை / மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு கோவாக்சின் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது." என்றார்.

இந்தியாவில் 3வது கொரோனா அலை
கோவிட் -19 இன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று இந்தியாவின் தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் 3வது அலை துவங்க வாய்ப்பு உள்ளது என்று என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்தார். எனவே மேலும் மேலும் கூடுதலாக மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று, அவர் கூறினார்.

பரிசோதனைகள்
2 வயது முதல் 18 வயதுக்கு இடையேயான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முதல் கட்ட பணிகள் இன்று காலை துவங்கியுள்ளன. முதலில் குழந்தைகள் அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகுதான் தடுப்பூசி செலுத்தப்படும். 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும். 525 தன்னார்வல குழந்தைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications