உயிரை காப்பாற்ற சென்று விபத்தில் சிக்கிய ஏர் ஆம்புலன்ஸ்! 7 பேருக்கு நேர்ந்த சோகம்!
டெல்லி: ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமரியா அருகே, நேற்று மாலை நடந்த ஏர் ஆம்புலன்ஸ் விமான விபத்தில், நோயாளி உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.
Redbird Airways Pvt Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் C90 (VT-AJV) ரக விமானம், ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து இரவு 7.11 மணிக்கு கிளம்பியது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்தது. சத்ரா துணை ஆணையர் கீர்த்திஸ்ரீ ஜி, "ஏர் ஆம்புலன்ஸில் இருந்த ஏழு பேரும் விபத்தில் உயிரிழந்தனர். விமானம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது," என்று தெரிவித்தார்.

சுமார் 7.30 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. சிமரியாவில் உள்ள பரியாது பஞ்சாயத்து பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியதாக கீர்த்திஸ்ரீ ஜி மேலும் தெரிவித்தார். விமானத்தில் இருந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக சத்ரா மாவட்டத்தின் எஸ்பிடிஓ சுபம் கந்தேல்வால், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள்: கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், சஞ்சய் குமார், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார்.
விபத்துக்குள்ளான இந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானப் பயணம், சஞ்சய் குமார் என்ற நோயாளிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் சின்ஹா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "லேதேஹர் மாவட்டத்தின் சந்த்வா பகுதியைச் சேர்ந்த 41 வயதான சஞ்சய் குமார், பிப்ரவரி 16 ஆம் தேதி 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது."
டெல்லியில் சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக சஞ்சய் குமாரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, திங்கட்கிழமை ஒரு ஏர் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நோயாளி அன்று மாலை 4:30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து டெல்லிக்கு கிளம்பினார் என்று சின்ஹா தெரிவித்தார்.
முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சம்பாய் சோரன், இந்த விபத்துச் செய்தி கேட்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அவர் தனது X தளத்தில், "விபத்தில் விமானப் பணியாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, ராஞ்சி விமான நிலைய இயக்குனர் வினோத் குமார் கூறுகையில், விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக தெரிவித்தார். "மோசமான வானிலை இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம், ஆனால் உண்மையான காரணம் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்" என்றும் அவர் விளக்கமளித்தார்.
டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையின்படி, "நேற்று Redbird Airways Pvt Ltd நிறுவனத்தின் பீச்கிராஃப்ட் C90 (VT-AJV) ரக விமானம், ராஞ்சி-டெல்லி வழித்தடத்தில் மருத்துவ மீட்பு (ஏர் ஆம்புலன்ஸ்) விமானமாக இயக்கப்பட்டது. இது ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள காசாரிய பஞ்சாயத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இரண்டு விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் இருந்தனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விமானம் இரவு 7:11 மணிக்கு ராஞ்சியில் இருந்து கிளம்பியது. இரவு 7:34 மணிக்கு கொல்கத்தா கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட பிறகு, வாரணாசிக்கு தென்கிழக்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், கொல்கத்தா மற்றும் ரேடார் தொடர்பை இழந்தது," என்றும் டிஜிசிஏ அறிக்கை தெரிவிக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications