222 கி.மீ வேகத்தில் ரன்வேயில் ஓடிய விமானம்.. குறுக்கே வந்த ஜீப்.. பைலட் செம.. புனேவில் பரபரப்பு
டெல்லி: 222 கிலோமீட்டர் வேகத்தில் ரன்வேயில் விமானம் ஓடிக் கொண்டிருந்தபோது, குறுக்கே ஒரு ஜீப் வந்தால்.. கூடவே ஒரு மனிதனும் நடந்து வந்தால்.. அடுத்து என்ன நடக்கும்? புனே விமான நிலையத்தில் என்ன நடந்ததோ அதுதான் நடக்கும். ஒருவேளை இதைவிட மோசமான சம்பவம் நடந்திருக்க கூடும். ஆனால் பைலட் தனது சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.
ஏர்பஸ் ஏ-321 வகையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம், இன்று காலை, புனே நகரிலிருந்து, டெல்லிக்கு புறப்பட்டது. அதில் 180 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர். ரன்வேயில் அந்த விமானம் ஓடத் தொடங்கியது. படிப்படியாக பைலட் அதன் வேகத்தை அதிகரித்தபடி இருந்தார்.

ஒருகட்டத்தில் விமானம் 222 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போதுதான், பைலட் ஒரு விஷயத்தை கவனித்தார். ரன்வே பகுதியில், ஒரு ஜீப் நின்று கொண்டிருந்தது. கூடவே ஒரு நபரும் இருந்தார். அதிர்ச்சியடைந்தார் பைலட். உடனடியாக பிரேக் போட்டு நிறுத்த முடியாது என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட பைலட், உடனடியாக விமானத்தை டேக்-ஆப் செய்தார்.
குறிப்பிட்ட தூரம் வரை ரன்வேயில் ஓடி முடிக்கும் முன்பாகவே, டேக் ஆப் செய்துவிட்டார் பைலட். இதனால், விமானத்தின் வால் பகுதி, தரையில் பட்டுள்ளது. இதனால் விமான உடல்பாகம் சேதமடைந்துள்ளது. அப்படியும், வேறு பிரச்சினைகள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட பைலட், அப்படியே டெல்லி வரை விமானத்தை இயக்கி பயணிகளை பத்திரமாக சேர்த்துவிட்டார்.
இந்த சம்பவத்தை இப்போது விமான ஒழுங்குமுறை, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரித்து வருகிறது. புனே விமான நிலையம் ஒரு இந்திய விமானப்படை விமானநிலையமாகும். நாட்டின் பல விமான நிலையங்களைப் போலவே, இங்கும் ராணுவ வீரர்கள், வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதேபோலத்தான் ராணுவ வீரர்கள் ஜீப்புடன் ரன்வேக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் பதிவைப் பாதுகாக்குமாறு டி.ஜி.சி.ஏ இந்திய விமானப்படையை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications