மூச்சுத்திணறும் டெல்லி.. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.. கட்டுமான பணிகளுக்கு தடை!
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் தற்போது காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி இருக்கும்.
காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

பஞ்சாப் மற்றும் அரியானா
டெல்லிக்கு அருகில் உள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு மிகக் கடுமையாக அதிகரிக்கிறது. குறிப்பாக டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசுகளை வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தடையை மீறி சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இது ஒருபுறம் இருக்க கட்டிடங்களை இடிக்கவும் டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

காற்று மாசு அதிகரிப்பு
இப்படி எத்தனையோ நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்தாலும் காற்று மாசு அதிகரிப்பது குறைந்த பாடில்லை. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. இதனால், டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது. நடப்பு சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. அதாவது காற்று மாசு 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தீபாவளி தினத்தன்று..
அரசின் தரவுகளை வைத்து பார்க்கும் போது இந்த காற்று மாசு 48 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது. டெல்லியில் 24 மணி நேரத்தில் சராசரியாக காற்றின் தரம் குறித்த குறியீட்டில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 394 ஆக இருந்தது. கடந்த வியாழக்கிழமை 354 ஆகவும் புதன் கிழமை 271 ஆகவும் செவ்வாய்க்கிழமை 302 ஆகவும் தீபாவளி தினத்தன்று 312- ஆகவும் காற்றின் தரம் இருந்தது.

கட்டுமான பணிகளுக்கு தடை
தற்போது காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதன் மூலம் நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கட்டும் திட்டம் பாதிக்கப்படும் எனத்தெரிகிறது. வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் டெல்லியில் காற்று மாசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் கட்டுமானங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று மாலை நடைபெற்ற அவசர கூட்டத்தில் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications