பாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்!
டெல்லி: திரிபுரா வன்முறைகள் தொடர்பாக புகார் அளிக்க சென்ற தம்மை பாஜகவில் இணையுமாறு அக்கட்சித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கேட்டுக் கொண்டதாக சி.பி.எம். ராஜ்யசபா எம்.பி. ஜார்னா தாஸ் பரபரப்ப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெறுவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்களையும் விலைபேசிக் கொண்டிருக்கிறது பாஜக. தற்போது சி.பி.எம். எம்.பி. ஜார்னா தாஸையும் கட்சி தாவ சொல்லியிருக்கிறார் பாஜக தலைவர் அமித்ஷா.
திரிபுரா மாநில ராஜ்யசபா எம்..பி.யான ஜார்னா தாஸ், அம்மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து புகார் தெரிவித்த அமித்ஷாவை சந்தித்தார். இச்சந்திப்பின் போது திரிபுரா வன்முறைகள் குறித்த ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் ஜார்னா தாஸ் கொடுத்தார்.

முடிந்தனர் இடதுசாரிகள்
அப்போதுதான் கட்சி தாவ அழைப்பு விடுத்திருக்கிறார் அமித்ஷா. இது தொடர்பாக ஜார்னா தாஸ் கூறியதாவது: இடதுசாரிகள் அத்தியாயம் முடிந்துவிட்டது என என்னிடம் அமித்ஷா கூறினார். அது சீரியசாக சொன்னாரா? அல்லது நகைச்சுவைக்காகவா? என தெரியவில்லை.

உள்துறை அமைச்சர் நீங்க..
அத்துடன் நான் திரிபுரா பிரச்சனைகளைப் பற்றி பேசத்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களை பாஜக தலைவராக இங்கே சந்திக்கவும் வரவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்கிற அடிப்படையில்தான் உங்களை சந்தித்தேன்.

உள்துறை அமைச்சர் நீங்க..
அத்துடன் நான் திரிபுரா பிரச்சனைகளைப் பற்றி பேசத்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களை பாஜக தலைவராக இங்கே சந்திக்கவும் வரவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்கிற அடிப்படையில்தான் உங்களை சந்தித்தேன்.

தனி ஆளா எதிர்ப்பேன்
இதுபோல கட்சி தாவிவிடுங்கள் என்றெல்லாம் பேசக் கூடாது. நான் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதுவும் ராஜ்யசபாவில் நான் மட்டும் எம்.பி. நாங்கள் உங்களை மிக கடுமையாக தொடர்ந்து எதிர்ப்போம். உங்க சித்தாந்தம் வேறானது. உங்களை எதிர்க்கிற வரிசையில் ஒற்றை ஆளாக தனியாக நான் மட்டுமே இருக்கின்ற நிலைவந்தாலும் எதிர்த்துக் கொண்டேதானே இருப்பேனே தவிர கட்சி தாவ மாட்டேன் என கூறிவிட்டேன். இவ்வாறு ஜார்னா தாஸ் கூறினார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications