Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛எமர்ஜென்சி’.. ரயில்வே அமைச்சருக்கு போன் போட்ட பிரதமர் மோடி..ஆந்திர ரயில் விபத்தால் பறந்த அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பிரதமர் மோடி அவசரமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு போன் போட்டு விபரங்களை கேட்டறிந்த நிலையில் அறிவுரைகளை வழங்கினார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி அருகே சென்றது.

Andhra Train Accident: PM Narendra Modi spoke to Railway Minister Ashwini Vaishnaw

அப்போது திடீரென்று பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி இன்னொரு பயணிகள் ரயில் வந்தது.

இந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர்.

சுமார் 18க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரயில் விபத்து நடந்து பலி எண்ணிக்கை உயர தொடங்கியவுடன் பிரதமர் மோடி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு போன் போட்டு பேசினார்.

Andhra Train Accident: PM Narendra Modi spoke to Railway Minister Ashwini Vaishnaw

அப்போது ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அவர் கேட்டறிந்தார். அஸ்வினி வைஷ்ணவ் விபத்து பற்றி கூறிய நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினார். அலமண்டா மற்றும் கண்டகபள்ளி பிரிவுக்கு இடையே ரயில் தடம்புரண்ட விபத்து குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக அவர் பிரார்த்திக்கிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+