‛எமர்ஜென்சி’.. ரயில்வே அமைச்சருக்கு போன் போட்ட பிரதமர் மோடி..ஆந்திர ரயில் விபத்தால் பறந்த அறிவுரை
டெல்லி: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பிரதமர் மோடி அவசரமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு போன் போட்டு விபரங்களை கேட்டறிந்த நிலையில் அறிவுரைகளை வழங்கினார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி அருகே சென்றது.

அப்போது திடீரென்று பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி இன்னொரு பயணிகள் ரயில் வந்தது.
இந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர்.
சுமார் 18க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரயில் விபத்து நடந்து பலி எண்ணிக்கை உயர தொடங்கியவுடன் பிரதமர் மோடி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு போன் போட்டு பேசினார்.

அப்போது ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அவர் கேட்டறிந்தார். அஸ்வினி வைஷ்ணவ் விபத்து பற்றி கூறிய நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினார். அலமண்டா மற்றும் கண்டகபள்ளி பிரிவுக்கு இடையே ரயில் தடம்புரண்ட விபத்து குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக அவர் பிரார்த்திக்கிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications