'ரூட்' க்ளியர்.. உதவும் '15' நாடுகள் .. மீண்டெழுமா இந்தியா?
டெல்லி: கொரோனாவால் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு துரித கதியில் உதவ 15 நாடுகள் முன்வந்துள்ளன.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலை இந்திய நாட்டில் எதிர்பார்த்ததைவிட மிக உக்கிரமாக வீசி வருகிறது. பல்வேறு மாநிலங்களும் முழு லாக் டவுன் விதித்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றன.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தினமும் பலர் இறந்து வரும் நிலையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிணங்களை எரிக்கக் கூட இடமில்லாமல் தேசம் தடுமாறி வருவது கொடுமையின் உச்சம்.

விரைவில் வந்து சேரும்
இந்த சூழலில், அடுத்த சில நாட்களில் ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 15 நாடுகளில் இருந்து மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்சிஜன், வெண்டிலேட்டர், பிபிஇ கிட் போன்ற மருத்துவ உபகரணங்கள் வந்து சேரும் என்று தெரிகிறது.

ஆக்ஸிஜனுக்காக அல்லாடுகிறது
திங்களன்று, இந்திய விமானப்படை சி -17 விமானம் துபாயில் இருந்து ஆறு கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கொள்கலன்களைக் கொண்டு வந்தது. அதேபோல், ஒரு ஜெர்மன் நிறுவனம் இந்த வார இறுதியில் மேலும் 24 கொள்கலன்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், மருந்துகள் மற்றும் பிபிஇ கருவிகளையும் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்பெர்ராவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட், "இந்தியா உண்மையில் ஆக்ஸிஜனுக்காக அல்லாடுகிறது" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் அல்ல
எனினும், அரசு அதிகாரிகள் கொரோனா மருத்துவ உதவி கோருவதை தவிர்க்கின்றனர். வெளிநாட்டு உதவிகளை ஏற்காத இந்தியாவின் நீண்டகால கொள்கை இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நன்கொடை சலுகைகளில் பெரும்பாலானவை இந்திய செஞ்சிலுவை சங்கம் வழியாக பெறப்படுமே தவிர, அரசாங்கத்தால் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான சப்போர்ட்
சீனாவைப் பொறுத்தவரை, 'கேட்டால் உதவுவோம்' மோடில் உள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வெபின் கூறுகையில், "இந்தியா தங்களுக்கு தேவையானவற்றை கோரிக்கைகளை எழுப்பினால், சிறந்த முறையில் உதவிகளையும், ஆதரவையும் வழங்க சீனா தயாராக உள்ளது" என்று கூறினார்.

எந்த எண்ணமும் இல்லை
அதேபோல், இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்புவதில் காப்புரிமை சிக்கல் உள்ளதாக ரஷ்யா தயங்கிய நிலையில், அமெரிக்க மருந்து நிறுவனமோ, 'ரஷ்யா இந்தியாவுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் விவகாரத்தில் காப்புரிமை நோட்டீஸ் அனுப்பும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்து ரூட்டை க்ளியர் செய்திருக்கும் நிலையில், இந்த வார இறுதியில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த தகவலை ரஷ்யா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications