3வது அலை சாத்தியம்.. 40 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்.. ஐசிஎம்ஆர் தகவல்
டெல்லி : ஐசிஎம்ஆர் நடத்திய 4வது செரோ சர்வேயில் , மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், ஆறு வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் சுமார் 40 கோடி மக்கள் இன்னும் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அரசு எச்சரித்துள்ளது. எதிர்காலத்தில் நோய்த்தொற்றின் புதிய அலைகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே மக்கள்தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற ஐ.சி.எம்.ஆரின் 4 வது தேசிய கோவிட் செரோ கணக்கெடுப்பு 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் 67.6 சதவீதமாக இருந்தது,

ஆய்வு எப்படி
6-9 வயதுடையவர்களில் செரோ பாதிப்பு 57.2 சதவீதமாகவும், 10-17 வயதுடையவர்களில் 61.6 சதவீதமாகவும், 18-44 ஆண்டுகளில் 66.7 சதவீதமாகவும், 45-60 வயது உடையவர்களிடம் 77.6 சதவீதமாகவும், 60 வயதை கடந்தவர்களுக்கு இது 76.7 சதவீதமாக இருந்தது. இரண்டாவது அலைகளை பரப்புவதில் டெல்டா பிறழ்வு வைரஸின் பங்கு அதிகமாக இருந்தது. இதேபோல் தடுப்பூசி போடாது காரணம் என்று அரசு கூறியது.

செரோ பாதிப்பு
முன்னதாக டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட மூன்றாவது செரோ கணக்கெடுப்பில், செரோ பாதிப்பு 24.1 சதவீதமாக இருந்தது. தவிர, நான்காவது சுற்றில் கணக்கெடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர் SARS-CoV-2 க்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

சமூக இடைவெளி
எனவே தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளித்த போதும், மனநிறைவுக்கு இடமில்லை என்றும் ம் கோவிட்க்கு-பொருத்தமான நடத்தை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை தொடந்து கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா, "ஆறு வயதிற்கு மேற்பட்ட பொது மக்களில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 67.6 சதவீதம் பேர் சமீபத்திய தேசிய செரோ கணக்கெடுப்பில் SARS-CoV-2 ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. "மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரிடம் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் இல்லை, அதாவது சுமார் 40 கோடி மக்கள் இன்னும் COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளார்கள். ஆன்டிபாடிகள் இல்லாதவர்கள் தொற்று அலைகளின் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று டாக்டர் பார்கவா கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications