தேசிய கொடி அவமதிப்பு- கெஜ்ரிவால் மீது நடவடிக்கை தேவை- டெல்லி ஆளுநருக்கு மத்திய அமைச்சர் கடிதம்
டெல்லி: தேசிய கொடியை அவமதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி ஆளுநருக்கு அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அனுப்பியுள்ள கடிதம்:

கடந்த சில நாட்களாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் செய்தியாளர் சந்திப்பு வீடியோக்களை பார்த்து வருகிறேன். அதில் தேசியக் கொடியில் பச்சை வண்ணத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.
மேலும் வெள்ளை நிறத்தின் அளவு குறைவாகவும் இடம்பெற்றிருக்கிறது. இது தேசிய கொடியை பயன்படுத்துதல் தொடர்பான விதிகளை மீறுவதாகும். தேசிய கொடியை பயன்படுத்துதல் தொடர்பான சட்டப் பிரிவுகளில் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை மீறும் வகையில் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.
ஆகையால் இது தொடர்பாக கெஜ்ரிவால் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுகக் வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல் டெல்லி மாநில அரசுக்கும் பிரகலாத் சிங் படேல் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் டெல்லி அரசு எந்த பதிலையும் அவருக்கு அனுப்பி வைக்கவில்லை.












Click it and Unblock the Notifications