ரூபாயில் லட்சுமி ஜி கணேஷ் ஜி! எல்லோருமே பாராட்டுறாங்க மோடி ஜி! என்னென்ன சொல்றாரு பாருங்க கெஜ்ரிவால்!
டெல்லி : இந்திய ரூபாயில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு அமோகமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருக்கிறார்.
பாஜகவுக்கு கடுமையான அழுத்தம் தரும் கட்சிகளில் ஆம் ஆத்மி கட்சி முக்கியமான ஒன்று. பஞ்சாபில் காங்கிரசை தோற்கடித்த கையோடு குஜராத்திலும் கால் பதிக்க பாஜகவுக்கு எதிராக அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புதிய பரபரப்பு ஒன்றினை பற்ற வைத்திருக்கிறார் கெஜ்ரிவால். ஆனால் இந்த முறை பாஜகவுக்கு எதிர்ப்பாக இல்ல கிட்டத்தட்ட ஆதரவளிப்பது போல. அது என்னவென்றால் ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான்.

அரவிந்த் கெஜ்ரிவால்
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்," எத்தனை நடவடிக்கைகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் கடவுளின் ஆசி இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் லட்சுமியின் படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் வளர்ச்சி காணும்" எனக் கூறியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் கடும் கண்டனங்களையும் மற்றொரு தரப்பினர் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய ரூபாயில் லட்சுமி
இந்நிலையில் இந்திய ரூபாயில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு அமோகமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில்," நாட்டின் 130 கோடி மக்கள் இந்திய நாணயத்தின் ஒருபுறம் காந்திஜியின் படமும், மறுபுறம் ஸ்ரீ கணேஷ் ஜி மற்றும் லட்சுமி ஜியின் படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இறைவனின் ஆசீர்வாதம்
இன்று நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், வளரும் மற்றும் ஏழை நாடுகளில் பட்டியலிலே இந்தியா கணக்கிடப்படுகிறது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். ஏன்? ஒருபுறம் நாட்டுமக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். மறுபுறம் நம் முயற்சிகள் பலனளிக்க இறைவனின் ஆசீர்வாதமும் வேண்டும்.

பிரதமருக்கு கடிதம்
சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் ஆகியவை ஒன்றாக சேர்வதன் மூலம் மட்டுமே நாட்டை முன்னேற்றும். நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை பகிரங்கமாக கோரிக்கை விடுத்தேன். அப்போதிருந்து, இந்த ஆலோசனைக்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது, இது குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் உள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்." என கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications