ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல்.. தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியதால் ஷாக்! ம.பியில் பரபரப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்குள் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராம ஜென்ம பூமியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவில் கட்டுமான பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில், நாடே எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கோவில் கருவறையில் அமைக்கப்பட்ட பால ராமர் பிரதிஷ்டை நடைபெற்றது.

தொடர்ந்து பால ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்துக்கான முக்கிய பூஜைகள் நடந்தன. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அயோத்தி ராமர் கோவில் தொடர்புடைய செய்திகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தன.
இந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் காவிக் கொடி கட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டம் ராணாபூரில் அமைந்து இருக்கும் தப்தலை என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தேவாலயத்தில் மேல் ஏறிய சிலர் ஜெய்ஸ்ரீராம் என சொல்லிக்கொண்டே காவிக்கொடியை கட்டினர்.
நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தேவாலாயம் மீது காவிக்கடி கட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தேவாலாய போதகர் நர்பு அமலியா கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருந்த போது திடீரென வந்த சுமார் 25 பேர் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் தேவாலயத்திற்குள் நுழைந்தனர்.
சிலர் காவிக்கொடியுடன் தேவாலயம் மீது ஏறினார்கள். வந்திருந்த அனைவரும் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்களை எனக்கு நன்கு தெரியும். இப்படி செய்வது நல்லது இல்லை என்று கூறினேன். ஆனால் அவர்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இதற்கு முன் இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை" என்றார்.
தேவாலாயத்தில் ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, "தேவாலயம் இருப்பது தனி நபர் ஒருவருக்கு சொந்தமான வீடு. இது தேவாலயம் இல்லை. பிரார்த்தனைக்காக அவர் பயன்படுத்தி வருகிறார். எனவே தான் நாங்கள் இதுதொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்யவில்லை.
அந்த நபர் புகார் அளிக்கவும் விரும்பவில்லை" என்றனர். ஆனால், இதை மறுத்துள்ள மதபோதகர் அமலியார், இது என் வீடு இல்லை என்றும் தேவாலயம் தான். 2016 ஆம் ஆண்டு வாங்கினேன். ஞாயிற்றுகிழமைதோறும் 30 - 40 பேர் வந்து பிரார்த்தனை செய்வாரகள். இது வழிபாட்டு தலம்தான். இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மன்னிப்பு கேட்டதால் நான் புகார் எதுவும் அளிக்கவில்லை" என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications