விடுதலைப் போரில் பங்கேற்காத பாஜக நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டே சீரழிக்கிறது: சோனியா அட்டாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக திட்டமிட்டு சீரழிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசியதாவது:

இன்று வெறுப்பரசியலை கையாளும் பாஜகவினர் சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர். அதற்கு தகுதியானவர்கள் பாஜகவினர் அல்ல.

BJP deliberately damage Parliamentary democracy: Sonia gandhi

நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டே சீர்குலைத்துவிட்டது பாஜக. தேசத்தைப் பிளவுபடுத்துகிற மக்களை பிரிக்கக் கூடிய இவர்களுக்கு விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லை. நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக உள்ளது .

இத்தகைய சீரழிவு சக்திகளுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்து போராடும். பெருமைக்குரிய நமது அடிப்படை நம்பிக்கைகளை சீரழிப்பதில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

காங்கிரஸ் தலைவர்கள் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று துயரங்களை எதிர்கொண்டனர். நமது தலைவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தனர். தங்கள் வாழ்வையே நமது தலைவர்கள் இழந்தனர். தேசத்தின் ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் தொண்டர்கள் பாதுகாக்க வேண்டியது கடமை. இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+