இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கியது!
டெல்லி: இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ மற்றும் சுகாதார முன்களப் பணியாளர்கள் , இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கான பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று தொடங்குகியது. டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டது.
நாட்டில் ஓமிக்ரான் 3500 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளது. உலகில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஓமிக்ரான் பரவியது. இது கொரோனா தடுப்பூசிகளுக்கு மட்டுப்படாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பூஸ்டர் டோஸுக்கு இந்த ஓமிக்ரான் கட்டுப்பபடும் என்றும் சொல்லப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும். 10 ஆம் தேதி முதல் இணை நோய்கள் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றார்.
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று நாடு முழுவதும் தொடங்கின. இதற்காக கோவின் இணையதளத்தில் பதிவு செய்வது நேற்று முன் தினமே தொடங்கிவிட்டது. இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கின.
பூஸ்டர் டோஸ் செலுத்த வருவோர் 2 ஆவது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். கோவின் தளத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸுக்கு பதிவு செய்யலாம்.

ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒரு முறை தங்கள் பதிவை முன்னெச்சரிக்கை டோஸ் பிரிவில் பதிவு செய்தால் போதுமானது. ஏற்கெனவே 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவரிடம் எந்த சான்றையும் பெற தேவையில்லை. முதல் இரு தவணைகள் எந்த தடுப்பூசியை போட்டார்களோ அதே தடுப்பூசியைதான் பூஸ்டர் டோஸிலும் போட வேண்டும். அதாவது ஏற்கெனவே இரு டோஸ்கள் கோவிஷீல்டு என்றால் இந்த மூன்றாவது டோஸும் கோவிஷீல்டுதான். கோவாக்சின் என்றால் மூன்றாவது டோஸும் கோவாக்சின்தான்.
ஓமிக்ரான் பரவி வரும் நிலையில் 3ஆவது டோஸ் செலுத்தினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதை 88 சதவீதம் தடுக்கிறது என பிரிட்டனில் ஆய்வுகள் கூறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications