விண்வெளித் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி.. டிசம்பரில் மங்கள்யான் திட்டம்
டெல்லி: விண்வெளித் துறைக்கு கடந்த பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ரூ.13,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 8,228 கோடி ரூபாய், மூலதன செலவீனமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையின் கீழ், நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டட் என்ற பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டிருந்தது அல்லவா, அதற்கு பட்ஜெட்டில் ரூ700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி-சிஎஸ்51 ராக்கெட் ஏவுதலை, நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட் செயல்படுத்த உள்ளது. இந்த ராக்கெட்டில், பிரேசில் நாட்டின் அமேசோனியா செயற்கைக்கோள் மற்றும் நமது நாட்டின் சில செயற்கைக்கோள்கள் இடம் பெறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்த பட்ஜெட்டில் விண்வெளித்துறைக்கு 13,949.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கடந்த 2019-20 பட்ஜெட்டை ஒப்பிட்டால், சுமார் 900 கோடி அதிகமாகும். 2020-21ம் நிதியாண்டு பட்ஜெட்டை விட இது ரூ.4,449 கோடி அதிகமாகும்.
மனிதர்களுடனான விண்வெளி பயணமான ககன்யானின் ஒரு பகுதியாக, நான்கு இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் விண்வெளி பயண அம்சங்கள் குறித்து பயிற்சி பெறுகின்றனர். "முதல் ஆளில்லா ஏவுதல் 2021ம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது," என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications