மோடி அரசின் பட்ஜெட்டில் முதல் முறையாக ஒலித்த தமிழ்.. அதுவும் இப்படி ஒலித்தது தான் ஹைலைட்டே
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் பட்ஜெட்டின் போது ஒருமுறை கூட தமிழ் ஒலித்தது இலலை. ஆனால் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்த பிறகு இந்த பட்ஜெட்டில் முதல் முறையாக தமிழ் ஒலித்துள்ளது.
2004 முதல் 2014 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்ததார்.
தமிழகத்தைச் சேர்ந்த அவர் ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போது திருக்குறள் அல்லது எதேனும் தமிழ் நூலை பட்ஜெட்டில் மேற்கொள்காட்டி பேசுவார்.

பட்ஜெட்டில் தமிழ்
இதனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பட்ஜெட்டில் என்ன இடம்பெறுகிறதோ இல்லையோ, கட்டாயம் ப.சிதம்பரத்தின் மூலம் தமிழ் இடம் பெறும்.

மோடி ஆட்சியில்
இந்த சூழலில் மத்தியில் 2014ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. 2014ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் நிதியமைச்சராக அருண்ஜெட்லி இருந்தார். இதனால் அவர் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதனால் தமிழ் மேற்கோள்களோ அல்லது தமிழ் இலக்கியங்களோ பட்ஜெட்டில் இடம் பெற்றதில்லை.

இன்று பட்ஜெட் தாக்கல்
ஆனால் மோடி அரசு இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. நிதியமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் இடம் பெற்றார். அவர் தான் இன்றைக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழில் மேற்கொள்
இந்த பட்ஜெட்டில் வர்த்தகம் மற்றும் வரிச்சலுகைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வேலைவாய்ப்பு திறனை அதிகரித்தல் உள்பட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன் தமிழ் இலக்கியமான புறநானூறில் வந்ததை மேற்கோள் காட்டி பேசினார்.

வியந்த உறுப்பினர்கள்
பிசிராந்தையார் வரி விதிப்பு குறித்து பாண்டிய மன்னனுக்கு கூறிய அறிவுரையை அழகாக தமிழில் கூறி பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துரைத்தார். இதை கேட்டு பிரதமர் மோடி உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வியந்தனர்.

எப்படி வரி விதிக்க வேண்டும்
இதன் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பட்ஜெட்டில் தமிழ் மொழி ஒலித்துள்ளது. அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனால் ஒலித்துள்ளது. அதுவும் எப்படி.. ஒரு அரசன் தன் நாட்டு மக்களிடம் எப்படி வரி வசூலிக்க வேண்டும் என்பது தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒலித்ததுதான் இதில் ஹைலைட்டே...
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications