மமதா vs சிபிஐ.. ஒன்று சேர்ந்த கட்சிகள்.. மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு!
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார்.
தற்போது சிபிஐக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிய பூதகரமாகி உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கிறது.

என்ன நடந்தது
நேற்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது. இந்த ஊழல் வழக்கில் இவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று கைது செய்ய முயன்றது.

சிபிஐ கைது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுதான் தற்போது கொல்கத்தாவில் நடக்கும் பிரச்சனைக்கும் மமதாவின் தர்ணாவிற்கும் காரணம்.

என்ன திட்டம்
இதையடுத்து தற்போது பல கட்சித் தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு போன் செய்து பேசி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல எதிர்கட்சித்தலைவர்கள் மமதாவிற்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார்கள். நேற்று இரவே இவர்கள் எல்லோரும் ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

புகார் அளிக்க முடிவு
இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது. அதாவது மத்திய பாஜக அரசு தேர்தல் நேரத்தில் அதிகாரிகளை கைக்குள் கொண்டு வரும் வகையில் சிபிஐயை வைத்து எல்லோரையும் பயமுறுத்துகிறது. சிபிஐ அமைப்பை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று புகார் அளிக்க இருக்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications