சோதனைக்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்துங்கள்.. பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நிபுணர்குழு வலியுறுத்தல்
டெல்லி: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் பெறுவதற்கு தன்னார்வலர்களை அதிகரிக்க வேண்டும் என்றும் இடைக்கால செயல்திறன் பகுப்பாய்வு நடத்த வேண்டும் என்றும் நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் மருந்து தர கட்டுப்பாட்டு நிபுணர் குழு நேற்று ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கோவிஷீல்டிற்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கு பரிந்துரைத்தது. இந்த மருந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது, இதன் மூலம் நாட்டில் முதல் கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு அடுத்த சில நாட்களில் வழிகள் உருவாகி உள்ளது.

அதேநேரம் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) மருந்து குறித்து நிபுணர் குழு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை பெறுவதை கருத்தில் கொண்டு, மருத்துவ சோதனைக்கு தன்னார்வலர்களை சேர்ப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும் கோவாக்சினுக்கு இடைக்கால செயல்திறன் பகுப்பாய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதேநேரம் ஆக்ஸ்போர்டு COVID-19 தடுப்பூசிக்கு தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கும்போது, குழு சில ஒழுங்குமுறை விதிகளை விதித்தது, இதன்படி 18 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டு முறை மருந்துகளை அளிக்க வேண்டும என்று கூறியுள்ளது.
மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிலும் உலகெங்கிலும் நடந்து வரும் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் தரவை விரைவாக மதிப்பாய்வு செய்ய சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், இந்நிறுவனம் நோய்த்தடுப்பு (AEFI) மற்றும் பக்க விளைவுகள் (AESI) தொடர்பான தரவுகளை இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை, சரியான மாதாந்திர பகுப்பாய்வை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications