போதும் இத்தோடு நிறுத்திக்கலாம்..மத்தியில் இருந்து வந்த சிக்னல்.. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எண்ட்கேம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்தியாவில் கடந்த 4 வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை திருத்தவோ அல்லது கைவிடுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது.

கடந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.

கொரோனா 3வது அலை

கொரோனா 3வது அலை

தற்போது 3வது அலை இந்தியாவில் உள்ள நிலையில், ஜனவரியில் தினசரி பாதிப்பு உச்சம் தொட்டது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போதிலும் கடந்த அலைகளைப் போல முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை. தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த வாரத்தில் தினசரி சராசரி வழக்குகள் 50,476 ஆகவும், கடந்த 24 மணி நேரத்தில் 27,409 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தினசரி வழக்கு நேர்மறை விகிதம் புதன்கிழமை 3.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் உலகளாவிய ரீதியிலும் இந்தியாவிலும் வைரஸின் பரவல் மற்றும் சுழற்சியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய வழிகாட்டுதல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சுகாதார அமைச்சகம் பிப்ரவரி 10 ஆம் தேதி சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்களை திருத்தியது

கட்டுப்பாடுகளில் தளர்வு

கட்டுப்பாடுகளில் தளர்வு

நாடு முழுவதும் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் குறைந்து வருவதால், புதிய வழக்குகளின் போக்கு மற்றும் அவர்களின் பிராந்தியங்களில் நேர்மறை விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்ய, மாற்ற அல்லது கைவிடுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய கேட்டுக் கொண்டுள்ளது. புதன்கிழமையன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தடைபடக் கூடாது

தடைபடக் கூடாது

அந்த கடிதத்தில், "இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஜனவரி 21 முதல் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், முந்தைய மாதங்களில், வழக்குகள் அதிகரித்து வருவதால், சில மாநிலங்கள் தங்கள் எல்லைகள் மற்றும் விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன எனவும், கொரோனா பாதிப்பை பொறுத்து பொது சுகாதார சவாலை திறம்பட நிர்வகிக்கும் அதே வேளையில், மாநில அளவிலான நுழைவு புள்ளிகளில் விதிக்கப்படும் கூடுதல் கட்டுப்பாடுகளால் மக்களின் நடமாட்டம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தடைபடக்கூடாது என்பது முக்கியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+