முடிந்தது தேர்தல்.. தொடரும் போர்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்.!
டெல்லி : உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது.
கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கும் கீழ் ஆகவே இருந்து வந்தது. போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் 110 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெயின் விலை அடுத்தநாளே 118 டாலராக அதிகரித்தது.

பெட்ரோல் டீசல் விலை
சுமார் 13 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 139.19 டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 10721.94 ரூபாயாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை உள்ளது. உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என யூகங்கள் கிளம்பி உள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்ய அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் காரணமாக இன்று ஒரே நாளில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரை உயர்ந்தது. இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என கூறப்பட்டு வரும் நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

மக்கள் நலன் முக்கியம்
இதுகுறித்து பேசிய அவர், கச்சா எண்ணையின் விலை அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும் போர் சூழல் நிலவுவதால் கச்சாஎண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் அதனை கருத்தில் கொண்டு விலையை நிர்ணயிக்கும் எனவும் மக்களின் நலன் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார் மேலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் என்பது தவறானது என்றும், தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது என்று கூறுவது சரியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications