முடிந்தது தேர்தல்.. தொடரும் போர்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்.!
டெல்லி : உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது.
கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கும் கீழ் ஆகவே இருந்து வந்தது. போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் 110 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெயின் விலை அடுத்தநாளே 118 டாலராக அதிகரித்தது.

பெட்ரோல் டீசல் விலை
சுமார் 13 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 139.19 டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 10721.94 ரூபாயாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை உள்ளது. உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என யூகங்கள் கிளம்பி உள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்ய அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் காரணமாக இன்று ஒரே நாளில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரை உயர்ந்தது. இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என கூறப்பட்டு வரும் நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

மக்கள் நலன் முக்கியம்
இதுகுறித்து பேசிய அவர், கச்சா எண்ணையின் விலை அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும் போர் சூழல் நிலவுவதால் கச்சாஎண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் அதனை கருத்தில் கொண்டு விலையை நிர்ணயிக்கும் எனவும் மக்களின் நலன் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார் மேலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் என்பது தவறானது என்றும், தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது என்று கூறுவது சரியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications