சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் யூனியன் பிரதேசங்களாகிறதா?.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவை சேர்ந்த மஸ்லீஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி லோக்சபாவில் அண்மையில் பேசுகையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது.
இது வெறும் தொடக்கம்தான். இனி வரும் காலங்களில் சென்னை, ஹைதராபாத், மும்பை, ஆமதாபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளது என கூறியிருந்தார்.

பொய்யான குற்றச்சாட்டு
இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறி வருகின்றன.

நகர வளர்ச்சி
லோக்சபாவில் ஒவைஸி கூறிய குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில் அளிப்பதற்கு முன்னதாகவே அவர் அவையை விட்டு வெளியேற்றிவிட்டார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது.

யூனியன் பிரதேசம்
எனவே மேற்கண்ட நகரங்களை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை. எனவே தேவையற்ற கவலை வேண்டாம். பொய்யான தகவல்களை பரப்புவதே தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும் மஸ்லீஸ் கட்சிக்கும் வேலையாகிவிட்டது.

உண்மையான குணம்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தெலுங்கானா மேலவை தேர்தலில் பாஜக இரு இடங்களிலும் நிச்சயம் வெல்லும். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் உண்மையான குணத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். என கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications