டெல்லி கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளாக 500 ரயில் பெட்டிகள்- பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு: அமித்ஷா
டெல்லி: டெல்லியில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கைகளாக 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் டெல்லி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

டெல்லியில் கொரோனா மரணங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மிக முக்கியமான முடிவுகள் இன்றை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட தேவையான அனைத்தும் டெல்லி அரசுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.

டெல்லியில் சிறு மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உதவி எண்களும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஆரோக்யா சேது ஆப் ஒவ்வொருவரது மொபைல் போனிலும் டவுன்லோடு செய்யப்பட வேண்டும்.
டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளாக 500 ரயில் பெட்டிகள் உடனடியாக வழங்கப்படும். டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் 2 மடங்கு, 3 மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications