2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக்
டெல்லி: இந்தியாவில் பணிபுரியும் தங்களது 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாய்ப்புகளையும் நலனையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சீனாவின் அத்துமீறிய தாக்குதலைத் தொடர்ந்து அந்த நாட்டின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடிதடை விதித்தது. இதில் டிக்டாக் செயலியும் (ஆப்) ஒன்று.
தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் துரதிருஷ்டவசமான சிக்கல்
டிக்டாக் செயலியைப் பொறுத்தவரையில் இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நோக்கத்தில் வெற்றிகரமாகவே செயல்படுத்தி வந்தோம். தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலி செயல்படுவதற்கு துரதிருஷ்டவசமான சிக்கல் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். இந்திய சட்டங்களுக்குட்பட்டு பயனாளர் விவரம், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்திலும் டிக்டாக் செயலி அக்கறைகாட்டி வருகிறது.

இந்தியாவில் 20 கோடி பயனாளர்கள்
2018-ம் ஆண்டு முதல் இந்தியாவில் டிக்டாக் செயலியானது 20 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கிறது. பயனாளர்கள் தங்களது உணர்வுகளை, திறமைகளை சர்வதேச உலகின் வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பை டிக்டாக் செயலி உருவாக்கிக் கொடுத்தது. டிக் டாக் செயலி மூலம் பல லட்சக்கணக்கானோர் தங்களது வெளிவராத திறமைகளை பகிரங்கப்படுத்தினர். இதன்மூலம் அவர்களது வாழ்வாதாரமும் மேம்பட்டிருந்தது.

சமூகம் சார் நடவடிக்கைகள்
இதனால் ஒருகட்டத்தில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களுக்கு என தனி செயலியை உருவாக்கும் திட்டமும் இருந்தது. இப்போது இந்தியாவின் நகரங்கள், கிராமங்கள் என அனைத்திலும் டிக்டாக் செயலி சென்றடைந்திருக்கிறது. மேலும் யுனிசெப், யுனிடிபி போன்ற சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்தும் டிக்டாக் செயலி சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பங்கேற்றது. நம்முடைய பணியாளர்கள்தான் நமக்கு மிகப் பெரும் பலம்.

வாய்ப்புகளை பாதுகாப்போம்
2,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டிருக்கும் நாம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகவே பயணிப்போம். இந்த பணியாளர்களின் நலனையும் வாய்ப்புகளையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் இந்தியாவுக்கான ஆக்கப்பூர்வமான நமது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications