2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக்
டெல்லி: இந்தியாவில் பணிபுரியும் தங்களது 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாய்ப்புகளையும் நலனையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சீனாவின் அத்துமீறிய தாக்குதலைத் தொடர்ந்து அந்த நாட்டின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடிதடை விதித்தது. இதில் டிக்டாக் செயலியும் (ஆப்) ஒன்று.
தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் துரதிருஷ்டவசமான சிக்கல்
டிக்டாக் செயலியைப் பொறுத்தவரையில் இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நோக்கத்தில் வெற்றிகரமாகவே செயல்படுத்தி வந்தோம். தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலி செயல்படுவதற்கு துரதிருஷ்டவசமான சிக்கல் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். இந்திய சட்டங்களுக்குட்பட்டு பயனாளர் விவரம், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்திலும் டிக்டாக் செயலி அக்கறைகாட்டி வருகிறது.

இந்தியாவில் 20 கோடி பயனாளர்கள்
2018-ம் ஆண்டு முதல் இந்தியாவில் டிக்டாக் செயலியானது 20 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கிறது. பயனாளர்கள் தங்களது உணர்வுகளை, திறமைகளை சர்வதேச உலகின் வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பை டிக்டாக் செயலி உருவாக்கிக் கொடுத்தது. டிக் டாக் செயலி மூலம் பல லட்சக்கணக்கானோர் தங்களது வெளிவராத திறமைகளை பகிரங்கப்படுத்தினர். இதன்மூலம் அவர்களது வாழ்வாதாரமும் மேம்பட்டிருந்தது.

சமூகம் சார் நடவடிக்கைகள்
இதனால் ஒருகட்டத்தில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களுக்கு என தனி செயலியை உருவாக்கும் திட்டமும் இருந்தது. இப்போது இந்தியாவின் நகரங்கள், கிராமங்கள் என அனைத்திலும் டிக்டாக் செயலி சென்றடைந்திருக்கிறது. மேலும் யுனிசெப், யுனிடிபி போன்ற சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்தும் டிக்டாக் செயலி சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பங்கேற்றது. நம்முடைய பணியாளர்கள்தான் நமக்கு மிகப் பெரும் பலம்.

வாய்ப்புகளை பாதுகாப்போம்
2,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டிருக்கும் நாம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகவே பயணிப்போம். இந்த பணியாளர்களின் நலனையும் வாய்ப்புகளையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் இந்தியாவுக்கான ஆக்கப்பூர்வமான நமது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications