சந்திரயான் -3: சர்வதேச விண்வெளித்துறையில் இந்திய பங்களிப்பை அதிகரிக்கும்: ஜிதேந்திர சிங் நம்பிக்கை
டெல்லி: சந்திரயான் -3 விண்கலம் விண்வெளித்துறையில் இந்தியாவின் சர்வதேச அளவிலான பங்களிப்புகளை அதிகரிக்கும் என்று மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
சந்திரயான் -3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிற்பகல் சந்திரயான் -3 விண்ணில் செலுத்தப்படுகிறது. இதனை ஒட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டின் போது சந்திரயான் -3 உருவ மாதிரியை வைத்தும் வழிபாடு நடத்தினர்.

இதனிடையே மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டியும் இணைந்து "சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம்: குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் செயற்கை நுண்ணறிவு" என்ற தலைப்பிலான கூட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இந்திய- அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் (ஐயுஎஸ்எஸ்டி.எஃப்) மற்றும் அமெரிக்க இந்திய தொழில்நுட்ப மன்ற அறக்கட்டளைச் செயலகம் (யுஎஸ்ஐஎஸ்டிஇஎஃப்) இணைந்து இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளன.
இந்தத் திட்ட அழைப்பு ஆகஸ்ட் 31, 2023 வரை அமலில் இருக்கும். இந்திய-அமெரிக்க கூட்டு முன்முயற்சிகளுக்கு இதில் ஊக்கமளிக்கப்படும். இதில் வணிக ரீதியாக சாத்தியமான மற்றும் சமூக ரீதியான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் முன்மொழிவுகள் ஊக்குவிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், விண்வெளிக்கு மனிதப் பயணம் மேற்கொள்வதில் ஒத்துழைப்புக்கான உத்திசார் கட்டமைப்பை அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து உருவாக்கி வருவதாகக் கூறினார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியா, ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
இருதரப்பிலும் ஒரு புதிய அத்தியாயத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் உருவாக்கி இருப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் கூட்டு செயல்பாடு மற்றும் வணிகமயமாக்கலுக்காக அமெரிக்க-இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதியத்தின் (யுஎஸ்ஐஎஸ்டிஇஎஃப்) கீழ் 20 லட்சம் டாலர் மானியத் திட்டம் தொடங்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வரவேற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.
குவாண்டம் தொழில்நுட்பத்தில் துடிப்பான மற்றும் புதுமையான அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தேசிய குவாண்டம் இயக்கத்துக்கு (என்க்யூஎம்) இந்தியா அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் திறனை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டுள்ளதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நமது அன்றாட வாழ்க்கையில் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் சந்திரயான் -3 விண்கலம் விண்வெளித்துறையில் இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்புகளை அதிகரிக்கும்; அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) தொடர்பான துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications