குடியுரிமை திருத்த மசோதாவை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுத வேண்டும்: பிரதமர் மோடி
Recommended Video
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுத வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை எப்படியும் நிறைவேற்றுவது என்கிற முனைப்புடன் மத்திய அரசு உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் பாகிஸ்தானைப் போலவே பேசுகின்றன. இம்மசோதாவானது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டிய ஒன்று.
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து அமைதியை ஏற்படுத்தினோம். அதேபோல் அண்டை நாடுகளில் மத துன்புறுத்தல்களில் இருந்து தப்பி வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கத்தான் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறது. இது தொடர்பாக விவசாயிகள் முதல் ஏழைகள் வரை அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டறிந்து நிதி அமைச்சருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இக்கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, குடியுரிமை மசோதாவை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என பிரதமர் மோடி கூறினார் என்றார்ர்..
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications